கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு பின்னரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர் இன்று முதல் முறையாக மக்கள் பல்வேறு நிகழ்வுகளில் ஈடுபடுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதுபோன்ற நிகழ்வுகளில் ஈடுபடும்போது மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.
எல்லா நேரங்களிலும் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்றும் அதேநேரத்தில், பொது இடங்களில் சமூக விலகலையும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும் சிறப்பு நிகழ்வுகளை நடத்துவதற்கு பொலிஸ் மற்றும் சுகாதார அதிகாரிகளிடமிருந்து முன் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதுபோன்ற அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வுகளில் சுகாதார வழிகாட்டுதல்களை அமுல்படுத்த வேண்டும் என்பதுடன், பங்கேற்பாளர்கள் அதை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளு
கந்தளாய் - அக்போபுர பகுதியில் ரயில் தடம் புரண்டதில் 16 ப
மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் மீண
யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் அமைக்கப்படவுள்ள நவீன
நுரைச்சோலை அனல்மின் நிலையம் புனரமைக்கப்படும் வரை தனி
நாட்டில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ம
சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இராணுவம் தயார
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவ
சுமந்திரனால் முன்னெடுக்கப்படும் பயங்கரவாத தடைச்சட்ட
இந்தியாவின் பாண்டிச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமு
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெ
பதுளை − ஹாலிஎல பகுதியில் பாடசாலை மாணவியை கோடாரியால்
இலங்கைக்கு தேவையான எரிபொருளை ஏற்றிய 5 கப்பல்கள் எதிர்
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட
