தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் அதிபர் ஆல்பர்ட்டோ பெர்னாண்டஸ் தலைமையிலான மந்திரிசபையில் போக்குவரத்துத்துறை மந்திரியாக இருந்து வந்தவர் மரியோ மியோனி (வயது 56).
இவர் நேற்று முன்தினம் அர்ஜென்டினாவின் மத்திய பகுதியில் உள்ள ரொசாரியோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அதிபர் ஆல்பர்ட்டோ பெர்னாண்டசுடன் கலந்துகொண்டார்.
பின்னர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு தலைநகர் பியூனஸ் அயர்சின் ஜூனின் நகரில் உள்ள தனது வீட்டுக்கு காரில் புறப்பட்டார். காரை அவரே ஓட்டிச்சென்றார்.
சான் ஆண்டிரஸ் டி கில்ஸ் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்த போது கார் திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையில் தறிகெட்டு ஓடிய கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் மந்திரி மரியோ மியோனி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் ‘‘நமது அரசாங்கத்தின் போக்குவரத்து மந்திரியான மரியோ மியோனியின் மரணம் குறித்த செய்தி எனக்கு மிகுந்த வேதனையைத் தந்தது. ஒரு முழுமையான, அயராத, நேர்மையான அரசியல்வாதியை நாம் இழந்துள்ளோம். அவர் ஒரு முன்மாதிரியான அதிகாரியாக இருந்தார்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
மந்திரியின் கார் விபத்துக்குள்ளானதற்கு காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இதுபற்றி விரிவான விசாரணை நடத்த அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் உத்தரவிட்டுள்ளார்.
நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் உ
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய அதன் படைகளை குவிப்பதாக பிரித்த
ஐரோப்பாவையும் ஆசியாவையும் கடல் வழியாக இணைக்கும் வகைய
சோமாலிய பிரபல ஊடகவியலாளர் ஒருவர் அந்த நாட்டு தலைநகர்
வங்காள தேசத்தின் தேசிய தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின்
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஹியாலியா என்ற இடத்தி
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை
ஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 60ஆயிரத்தி
வங்கதேசம் நாடு கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து ப
பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற செனட் சபை(மேலவை) தோ்
அமெரிக்காவை சேர்ந்த மொடர்னா நிறுவனம் கொரோனாவுக்கு எத
மனித உரிமை ஆர்வலரான பேராசிரியர் பெர்னாண்ட் டி வரேன்னஸ
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அர
இங்கிலாந்து சுகாதாரத் துறை மந்திரி சஜித் ஜாவித் சையது
கத்தார் நாட்டின் தோகா நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடத
