உலக வர்த்தக அமைப்பின் அறிவுசார் சொத்துரிமை விதிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் நாட்டின் ஜெனீவா நகரில் உலக வர்த்தக அமைப்பின் பொதுச்சபை கூட்டம் இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கியது.
இந்த கூட்டத்தில் அறிவு சார் சொத்து விதிகளில் இருந்து கொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை விலக்கி வைக்க வேண்டும் என்ற இந்தியா உள்ளிட்ட நாடுகளின் நிலைப்பாட்டுக்கு அமெரிக்காவும் தனது ஆதரவை தெரிவித்தது. உலக வர்த்தக அமைப்பின் 100க்கும் மேற்பட்ட உறுப்புநாடுகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
எனினும் காப்புரிமை விலக்கு அளிக்க கூடாது என ஜெர்மனி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உலக வர்த்தக அமைப்பின் அறிவுசார் சொத்துக்கள் குழு அடுத்த மாதம் கூறி இது குறித்து முடிவு எடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தடுப்பூசிக்கு காப்புரிமை விலக்கு அளித்து ஒப்புதல் வழங்கினால் தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிப்பதற்கு ஏதுவாக அமையும். பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு குறைந்த விலையில் கொரோனா தடுப்பூசி கிடைக்கவும் வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி புதிய விசாரணை நடத்த வேண்டு
ரஷ்ய படையெடுப்பை முறியடிக்க ஜேர்மனி 2,000 கூடுதல் டாங்கி
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள மக்க
இஸ்ரேலின் மிகவும் பாதுகாப்பு வாய்ந்த சிறைகளில் ஒன்றா
ஆப்கானிஸ்தானின் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்
தலிபான்களுக்கு ஆயுதம் அளிப்பது, ஆப்கானிஸ்தானில் குளி
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தி இளவரசி
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தே
மியன்மாரில் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான்
மத்திய ரஷ்யாவில் உள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிதாரி
அமெரிக்காவில் நாளுக்கு நாள் துப்பாக்கி சூடு சம்பவங்க
தற்போது உலக நாடுகள் பலவற்றில் குரங்கம்மை நோய் பரவல் அ
ரஷ்யா, உக்ரைனின் Kryvyi Rih மீது மூன்று ஏவுகணைகளை ஏவியதாக Dnipropet
ஒருவராலும் யாராலும் தடுக்க முடியாத அபாரமான ஆயுத திறன்
ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான அனைத்து விமான சே
