ஆந்திர பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தில் மாமில்லப்பள்ளி கிராமத்தில் சுண்ணாம்பு சுரங்கம் ஒன்று உள்ளது. இங்கு ஜெலாட்டின் குச்சிகளை ஏற்றிக்கொண்டு வாகனம் ஒன்று வந்தது. சுரங்க தொழிலாளர்கள் சிலர் அதில் இருந்த ஜெலாட்டின் குச்சிகளை இறக்கி வைத்துள்ளனர்.
இதில், திடீரென அவை வெடித்து, அடுத்தடுத்து பரவி பாதிப்பு ஏற்படுத்தின. இந்த வெடிவிபத்தினால் அருகிலுள்ள கிராமங்களும் அதிர்ந்துள்ளன.
இதுதொடர்பாக, கடப்பா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்புராஜன் கூறுகையில், ஜெலாட்டின் குச்சிகள் அனைத்தும் புத்வெல் நகரில் இருந்து கொண்டு வரப்பட்டன. இந்த சுண்ணாம்பு சுரங்கம் உரிமம் பெற்று இயங்கி வருகிறது. ஜெலாட்டின் குச்சிகளை இறக்கி வைக்கும்பொழுது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களில் பலர் புலிவேந்துலா என்ற முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் சொந்த கிராம மக்கள் என கூறப்படுகிறது.
வெடிவிபத்து நடந்தபொழுது 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை உயர கூடும் என அஞ்சப்படுகிறது.
வெடி விபத்தில் இறந்தோர் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்தார்.
முதல்-மந்திரி ஹிமந்த விஸ்வ சா்மா குவாஹாட்டியில் செய்த
சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகம
கிழக்கு லடாக்கில் பல இடங்களில் எல்லை கோட்டை தாண்டி சீ
ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி நேற்று மா
டெல்லியில், நேற்று பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்
தமிழக சட்டப்பேரவை மூன்று நாள் விடுமுறைக்குப்பின் இன்
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட
சேலத்தை சேர்ந்த கோவிந்தராஜ், டாக்டர் ராஜசேகர், நாமக்க
காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட
கொரோனா தொற்றினால் பெற்றோர் 2 பேரையோ அல்லது அவர்களில் ஒ
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவை அவசர சி
தமிழகத்திற்கு சிறப்பு ஒதுக்கீடாக 1 கோடி கொரோனா தடுப்ப
மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 28,699 பேருக்கு கொரோனா வைர
தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்காக
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13-ந்தேதி
