More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை - மோசமான விளைவுகள் ஏற்படும்
அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை - மோசமான விளைவுகள் ஏற்படும்
May 03
அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை - மோசமான விளைவுகள் ஏற்படும்

அமெரிக்கா - வட கொரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. முந்தைய அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரியா அதிபர் கிம்ஜாங்வுடன் அணுஆயுத விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.



ஆனால் இதில் சுமூகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இருந்தாலும் இருநாடுகள் இடையேயான மோதல் போக்கு சற்று தணிந்து இருந்தது. தற்போது அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோபைடன் வடகொரியா மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் தெரிவித்து வருகிறார்.



இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு வட கொரியா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தது. அதிபர் கிம்ஜாங் சகோதரியும், அரசின் முக்கிய பொறுப்பில் இருக்கும் கிம்யோஜாங் கூறும்போது, ‘அடுத்த 4 ஆண்டுகளுக்கு நீங்கள் (அமெரிக்கா) நிம்மதியாக தூங்க வேண்டும் என்றால் எங்களை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்’ என்று தெரிவித்தார்.



இந்த நிலையில்கடந்த வாரம் அமெரிக்க பாராளு மன்றத்தில் அதிபர் ஜோ பைடன் தனது முதல் பேச்சை நிகழ்த்தினார். அப்போது அவர் வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.



அணுஆயுத விவகாரத்தில் வடகொரியா மற்றும் ஈரான் நாடுகள் அமெரிக்காவின் தேச பாதுகாப்புக்கும், உலக பாதுகாப்புக்கும் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்று விமர்சித்தார்.



இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேச்சுக்கு வட கொரியா கடும் கண்டனம் தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வட கொரியா தரப்பில் கூறியதாவது:



சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பாராளு மன்றத்தில் பேசும்போது, வடகொரியா அவர்களது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத் தலாக இருப்பதாக கூறி ஒரு பெரிய தவறை செய்து இருக்கிறார்.



விரோத கொள்கையை நிலைநிறுத்துவதற்கான தனது நோக்கத்தை அவர் வெளிப்படுத்தியன் மூலம் அமெரிக்கா மிகவும் மோச மான சூழ்நிலையை எதிர் கொள்ளும் என்று தெரிவித் துள்ளது.



இது குறித்து வடகொரியா வெளியுறவுத்துறை அதிகாரி குவான்ஜாங்கன் கூறும்போது, அரை நூற் றாண்டுகளுக்கு மேலாக அமெரிக்கா செய்ததை போல் வடகொரியா மீதான விரோத கொள்கையை தொடர்ந்து செயல்படுத்துவதற்கான ஜோபைடனின் பேச்சு தெளி வாக பிரதிபலிக்கிறது.



அமெரிக்க நாட்டின் அதிபர் ஒரு பெரிய தவறை செய்தார் என்பது உறுதி யாகி இருக்கிறது. தற்போது வட கொரியா மீதான அமெ ரிக்காவின் கொள்கையின் முக்கிய குறிப்பு தெளிவாகி விட்டதால் அதற்கான நட வடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய கட்டா யத்தில் இருக்கிறோம்.



காலப்போக்கில் அமெ ரிக்கா மிகவும் மோசமான சூழ்நிலையை சந்திக்கும்’ என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May01

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர

Oct04

நவம்பரில் எட்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்க

Sep12

அமெரிக்காவில் இரட்டை கோபுரம், பென்டகன் உள்ளிட்ட இடங்க

Sep23

ஆஸ்திரேலியாவில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம

Mar04

‘நேட்டோ விழித்தெழுந்து, இது ஒரு பிராந்திய மோதல் அல்ல.

Apr10

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட

Nov08

ஆப்கானிஸ்தானில் வன்முறையால் இந்த ஆண்டின் முதல் 6 மாதங

Apr23

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள புச்சா நகரில் மனித உரி

Sep04

நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் உள்ள சூப்பர் ம

Jun10

இராணுவ வீரர்களை தினமும் இழக்கும் உக்ரைன் 

ரஷ்யா

Jul18

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் கொரோனா

Feb04

தெற்கு ஒக்ஸ்போர்ட்ஷையரில் ஆயிரக்கணக்கான புதிய வீடுக

Mar30

இதுவரை 40 கொலைகள் செய்துள்ள ரஷ்யாவின் பெண் ஸ்னைப்பர் ஒர

Feb28

சீனா உக்ரைன் - ரஷ்ய போரை முன்மாதிரியாகக் கொண்டு தற்போத

Mar15

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் உக்ரைன் மீதான போர்

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (01:43 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (01:43 am )
Testing centres