தலைநகர் டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்பின்னர் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுவருகிறது. கடும் கட்டுப்பாடுகள் மற்றும் தீவிர நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது.
எனினும், தினசரி பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டி பதிவாகிறது. பாதிப்பு விகிதம் 11 சதவீதமாக உள்ளது. எனவே ஊரடங்கு கட்டுப்படுகளை நீட்டிக்க அரசு முடிவு செய்தது.
இந்நிலையில், டெல்லியில் கொரோனா நிலவரம் தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பேசினார். அப்போது, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பதாக அறிவித்தார். அடுத்த வாரம் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அவர் கூறினார்.
டெல்லியில் நேற்று 5430 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தினசரி தொற்று குறைந்தாலும், உயிரிழப்பு அதிக அளவில் ஏற்படுகிறது. நேற்று ஒரே நாளில் 337 பேர் உயிரிழந்தனர். 66 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, ஸ்டார் ஓட்டல்கள், ரி
மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் பொதுப்பணித
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்
அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் 6 சிலிண்டர் இலவசமாக வழங் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றும அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் பொது பல்கலைக் ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை கடந்த ஆண்டே தொடங உத்தர பிரதேசம் மாநிலத்தில் பூர்வாஞ்சல் விரைவு சாலை 341
