கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பிலான விவாதம் இன்று (19) நாடாளுமன்றில் ஆரம்பமாகவுள்ளது.
இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ள இந்த விவாதத்தின் பின்னர், நாளை பிற்பகல் 4 மணிக்கு குறித்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில், கலந்துரையாடுவதற்கான விசேட அமைச்சரவை கூட்டம் ஒன்று நேற்று இடம்பெற்றது.
கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி குறித்த சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டது. சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி உயர்நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை, பிரதமநீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில், கடந்த மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகி, 23ஆம் திகதி நிறைவடைந்தது.
இந்தநிலையில், உயர்நீதிமன்றின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், அதனை அவர் நேற்று சபையில் அறிவித்தார்.
இதன்படி இன்று ஆரம்பமாகின்ற நாடாளுமன்ற விவாதத்தின் போது, அரசாங்கம் குறித்த சட்டமூலத்திற்கான திருத்தங்களையும் முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராகம மருத்துவ பீட விடுதி வளாகத்தில் இரண்டு மாணவர் குழ
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை தவிர்ந்த, அமைச்சரவையிலுள்ள அ
வடக்கு மாகாணத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள
கடற்படையிடமிருந்து காணியை பெற்றுத்தர கோரி தீவக மக்
முப்பெரும் தேவியரும் ஒன்றிணைந்து ஆதிசக்தியாகக் காட்
மகளை துஷ்பிரயோகம் செய்து கருக்கலைப்பு செய்த தந்தை அட்
குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா A மற்றும் B ஆகிய இரண்
திருகோணமலை – குச்சவெளி – மதுரங்குடா பகுதியில் ஆண் ஒ
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக சமூக ஊடக ஆர்வல
சில நாட்களுக்கு முன்பு, குஜராத் மாநிலம் ஹசிராவில் இரு
கொழும்பு மாவட்டத்தில் ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவர
பாடசாலை மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி பால
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி அட்டகிரி பக
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அனைத்து விடயங்களும் கண்டறி
ஜப்பான் அரசின் நிதியுதவியில் யாழ். பல்கலைக்கழக கிளிநொ
