அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஊடுருவி நடத்தப்பட்ட இணையவழி தாக்குதலால் மிகப்பெரிய குழாய்வழி எரிபொருள் வினியோகத்தை நிறுத்த வேண்டிய நெருக்கடி கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்டது. இதனால் அமெரிக்கா முழுவதும் எரிபொருள் வினியோகம் தடைபட்டு, விலை உயர்வுக்கு வழிவகுத்தது. பல மாநிலங்கள் அவசர நிலையை பிறப்பிக்க வேண்டியதாயிற்று.
இந்த நிலையில் இணையவழி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நிர்வாக உத்தரவை அந்த நாட்டின் ஜனாதிபதியான ஜோ பைடன் நேற்று முன்தினம் பிறப்பித்தார்.
இதையொட்டி பிறப்பிக்கப்பட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இன்று (நேற்று) ஜனாதிபதி ஜோ பைடன் நாட்டின் இணைய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், கூட்டாட்சி அரசாங்க அமைப்புகளை பாதுகாப்பதற்கும் வகை செய்யும் நிர்வாக உத்தரவில் கையெழுத்து போட்டார். சமீபத்தில் சோலார் விண்ட்ஸ், மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச், காலனியல் பைப்லைன் போன்றவற்றில் இணைய பாதுகாப்பு அத்துமீறல்களால் நடந்த சம்பவங்கள்,
அமெரிக்காவின் பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் நெட்வொர்க்குகள் மீது இணையவழி தாக்குதல் குற்றங்களை நாடு எதிர்கொள்வதை நினைவூட்டுகின்றன. எனவே அவற்றை பாதுகாப்பதின்முலம், இணைய பாதுகாப்பு சடடங்களை நவீனமயமாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை இந்த நிர்வாக உத்தரவு செய்யும்” என கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கார் திருட்டில் ஈடுபட்ட 13 வயது சிறுவன் ப
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை
ஆப்கானிஸ்தானில் காந்தகார் பிராந்தியத்தில் பாகிஸ்தான
1991 வரையில் சோவியத் யூனியன் ஏறக்குறைய 1,700 அணு ஆயுதங்கள
துனிசியாவில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை சென்ற புலம்
ரஷியாவுடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ம
ரஷ்ய அதிபர் புடின் நேரடி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டு
சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் உள்ள பியூன் உயிரியல்
பிரித்தானிய பொருளாதாரத்தில் அதிக ஆற்றல் செலவுகள், பணவ
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் காஜ
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
அமெரிக்க அரசு துறைகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா, நெருப்பு வளையம் எ
மத்திய வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தத
அரபிக்கடலில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியான சர் கி
