தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. அதன்படி சென்னையில் சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் 200 இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல் போக்குவரத்து காவல்துறையினர் 118 இடங்களிலும் தணிக்கை மேற்கொண்டனர்.
அதன்படி நேற்று தேவையின்றி வெளியேறியதாக ஆயிரத்து 110 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்துடன் இது தொடர்பாக 169 இருசக்கர வாகனங்கள், 6 ஆட்டோக்கள் மற்றும் 11 இலகு ரக வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அதேபோல் சட்டம் ஒழுங்கு பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் 641 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் 969 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது முக கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 1,346 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதேபோல் தனிமனித இடைவெளியை கடைப் பிடிக்கவில்லை என்ற குற்றத்திற்காக 83 வழக்குகளும் , குறிப்பிட்ட நேரத்தை தாண்டி கடைகளை திறந்து வைப்பதற்காக 64 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது.
சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறி பலரும் பைக்குகளில் சுற்றித் திரிந்ததால் இன்றுமுதல் ட்ரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு நாளை (புதன்கிழமை) பிறந
புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உண்மையான நல்லாட்சியை
புதுச்சேரி அரசு கவிழ்வதற்கு ஜெகத்ரட்சகன் காரணம் என கு
பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம், பெட்ரோல் விலை
ஒன்றிய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டத்தை கிண்டல் ச
கொரோனா 2-வது அலை பாதிப்பு தற்போது மராட்டியத்தில் குறைந
இந்த சேலம் மாவட்டத்தில் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, அ
வெற்றிவேல், வீரவேல்; நீங்கள் எல்லாம் நல்லா இருக்கீங்க
தனியார் மருத்துவமனைகளில்
மத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் தங்கள் ந சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இன்று பேசிய
டாய்கேத்தான்-2021 ’ என்ற பெயரில் நடைபெற்ற பொம்மைகள் கண் சட்டம் தாண்டி சமூகத்தையும் சட்ட மாணவர்கள் படிக்க வேண் பேரறிவாளனுக்கு பிணை வழங்கியதற்கு நாம் தமிழர் கட்சியி
