மெயின்புரி மாவட்டத்தை சேர்ந்த பிரபாத் யாதவ் (33) என்ற இளைஞர் மதுராவில் ஆம்புலன்ஸ் ஓட்டிவருகிறார். 9 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர் இவர். முதல் அலையின் போதும், இப்போதும் ஆம்புலன்ஸ் ஓட்டி மக்கள் சேவையாற்றி வருகிறார். இந்நிலையில் அவரது தாயார் கடந்த 15-ந் தேதி மரணம் அடைந்தார். பிரபாத் இரவுப்பணியில் இருக்கும்போது அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நோயாளிகள் பலரையும் மருத்துவமனை அழைத்து வர வேண்டும் என்பதால் அவர் பணியில் இருந்து பாதியிலேயே செல்லவில்லை.
இரவு முழுவதும் 15 நோயாளிகளை அவர் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தார். அதன் பிறகே தனது கிராமத்துக்கு புறப்பட்டுச் சென்றார். மேலும் தாயின் இறுதிச்சடங்குகளை முடித்த கையோடு 24 மணி நேரத்தில் பணிக்கு திரும்பினார். கடந்த ஆண்டு ஜூலையில் பிரபாத்தின் தந்தை கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தார்.
அப்போதும் தந்தையின் இறுதிச் சடங்குகளை முடித்த கையோடு பிரபாத் பணிக்குத் திரும்பினார். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பிரபாத்தின் இந்த அர்ப்பணிப்பு உணர்வுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநா
உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தின் தபோவன் பக
மணப்பாறை சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணக
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேசன் அட்டை
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, ஸ்டார் ஓட்டல்கள், ரி
சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டண
ராமேஸ்வரத்திற்கு நேற்று முன்தினம் மாலை வந்த சசிகலா தன
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கை முன்னிட்டு கடந்த 2020-ம் ஆண
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் வரும் ஒக்ட
சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்ப
இந்தியாவினால், தமது எல்லைப்பகுதியை தற்செயலாக ஏவப்பட்
இந்தியாவின் புனே நகரில் உள்ள ஜேர்மன் வெதுப்பகம் மீத
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து நாள
