கொரோனா 2-வது அலை பாதிப்பு தற்போது மராட்டியத்தில் குறைந்து வருகிறது. குறிப்பாக மும்பையில் பாதிப்பு எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.
நேற்று புதிதாக மும்பையில் 1,362 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன்மூலம் மும்பையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை 7 லட்சத்து 1,266 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதேபோல 1,021 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகினர்.
இதுவரை 6 லட்சத்து 56 ஆயிரத்து 446 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
இதேபோல மும்பையில் கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று 34 பேர் உயிரிழந்தனர். ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நேற்று தான் மும்பையில் குறைந்த அளவு உயிரிழப்பு பதிவாகி உள்ளது. கடைசியாக ஏப்ரல் 13-ந் தேதி 26 இறப்புகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று உயிரிழந்தவர்களுடன் சேர்ந்து இதுவரை 14 ஆயிரத்து 742 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது நிதி தலைநகரில் 27 ஆயிரத்து 943 பேர் சிகிச்சையில் உள்ளனர். நோயில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 94 ஆக உள்ளது.
தற்போது நகரில் 44 கட்டுபாட்டு மண்டலங்கள் உள்ளன. மேலும் 200 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தொற்று பர
கொரோனாவின் எதிரொலியாக உலகம் முழுவதும் வறுமை அதிகரித்
பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து நேற்று பாக்
மேற்கு வங்காள மாநிலம் நந்திகிராம் தொகுதியில் முதல்வர
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மத்திய மந்திரிகளுக்கு த
தொழில் வளத்தையும், கட்டமைப்பையும் ஊக்குவிப்பதற்காக ம
புனே மாவட்டம் முல்சி தாலுகா பிரன்கட் எம்.ஐ.டி.சி. தொழிற
தமிழக சட்டபேரவையில் மார்ச் 18-ந் தேதி பட்ஜெட் தாக்கல் ச
ராஜஸ்தானின் கங்காநகர் மாவட்டத்தில் நேற்று பகலில் ராண
நமது நண்பர் யார், எதிரி யார் என்பது இன்று தெரிந்து விடு
தமிழகம் வரும் இலங்கை தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய
நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பின் 270 கோடி ரூபாய்
புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி கடந்த மே மாதம் 9-ம் த
வடமாநிலங்களில் கோலோச்சும்
ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோப்பூர் மாவட்டத்தில் குண்ட
