More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • துறைமுக நகர விடயத்தில் தேசப்பற்றாளர்கள் என வீரவசனம் பேசியவர்களின் மௌனம் வேடிக்கையாகவுள்ளது – சாணக்கியன்
துறைமுக நகர விடயத்தில் தேசப்பற்றாளர்கள் என வீரவசனம் பேசியவர்களின் மௌனம் வேடிக்கையாகவுள்ளது – சாணக்கியன்
May 20
துறைமுக நகர விடயத்தில் தேசப்பற்றாளர்கள் என வீரவசனம் பேசியவர்களின் மௌனம் வேடிக்கையாகவுள்ளது – சாணக்கியன்

அரசாங்கத்தில் தேசப்பற்றாளர்கள் என குறிப்பிட்டுக் கொள்பவர்கள் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூல விவகாரத்தில் மௌனம் காப்பது வேடிக்கையாகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.



கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



அவர் மேலும் குறிப்பிடுகையில்,



கொழும்பு துறைமுக நகரத்தின் நிர்வாகங்கள் ஒரு பிரத்தியேக ஆணைக்குழுவிற்கு வழங்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து பெரும்பாலான மக்கள் அறிந்திருக்கவில்லை. நாட்டின் தேசிய பிரச்சினைகள் தலைதூக்கும் போது அதனை மூடிமறைத்து மக்களின் கவனத்தை திசைத்திருப்ப அரசாங்கம் ஏதாவதொரு நாடகத்தை அரங்கேற்றும்.



கொழும்பு துறைமுக நகரத்திற்குள் சர்வதேச பாடசாலை, சர்வதேச வைத்தியசாலை நிர்மாணிக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. இந்த சர்வதேச பாடசாலை மற்றும் வைத்தியசாலைகளில் இலங்கையின் சாதாரண பிரஜைகளுக்கு அனுமதி வழங்கப்படாது. சீனர்களின் தேவைக்காகவே இவை உருவாகக்கப்படுகிறது.



கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் ஆளும் தரப்பின் ஒரு சிலர் தேசப்பற்றாளர்களை போல் வீரவசனம் பேசி இனங்களுக்கிடையில் தேவையில்லாத பிரச்சினைகளை தோற்றுவித்தார்கள்.



சிங்களே போன்ற அமைப்புக்களும் தேசிய கொடியில் தமிழ் முஸ்லிம் மக்களின் அடையாளங்கள் நீக்கப்பட வேண்டும் என்று தேவையற்ற கருத்துக்களை சமூகத்தின் மத்தியில் குறிப்பிட்டு வந்தார்கள். நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பல விடயங்கள் கொழும்பு துறைமுக நகர சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது என உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள நிலையில் தேச பற்றாளர்கள் என வீரவசனம் பேசியவர்கள் மௌனம் காப்பது வேடிக்கையாகவுள்ளது ஆகவே மக்கள் இவ்விடயம் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும். என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep15

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அ

Jul18

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டு அரசில் ஸ்ர

May20

இன்னும் ஓரிரு மாதங்களில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ர

Jun23

வடக்கு, கிழக்கில் எந்தவொரு பகுதியையும் தமிழ் மக்களின்

Dec31

பதுளை பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அ

Apr01

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கைக்கு வரவிரு

Sep26

மக்களின் போசாக்கு பிரச்சினைகளை கண்டறிய நாடளாவிய ரீதி

Oct16

ஐந்து இலங்கை மீனவர்களுடன் மீன்பிடிக் கப்பலொன்று இந்த

Sep06

நாடு தற்போது எதிர்க் கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு க

Oct23

பொதுமக்களின் பிரச்சினைக்கு இந்த அரசிடம் தீர்வு ஏதுமி

Feb23

ஜனாதிபதி அலுவலகத்தினையோ அல்லது ஜனாதிபதியின் இல்லத்த

May21

இன்று இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மண

Mar12

அனுராதபுரத்தில் அழகப்பெருமாகம பகுதியில், பிறந்த ஒன்ற

Apr04

நாடு முழுவதும் உள்ள ஆரம்ப பாடசாலைகளில் உள்ள மாணவர்ளுக

May08

இலங்கை எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Feb 01 (12:15 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Feb 01 (12:15 pm )
Testing centres