இந்த கன மழையால் பஞ்சாப் மாகாணத்தின் கிழக்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது.
இடைவிடாது கொட்டி தீர்த்த கன மழையால் அங்குள்ள பல்வேறு நகரங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஒகாரா நகரில் உள்ள தாரிக் அபாத் என்ற பகுதியில் கனமழையின் போது ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
இதில் அந்த வீட்டில் இருந்த பெண்கள், சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் இடிபாடுகளில் சிக்கினர்.
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மீட்புப்பணியில் இறங்கினர். எனினும் 3 பெண்கள், நான்கு சிறுவர்கள் உள்பட 8 பேரை பிணமாகத்தான் பார்க்க முடிந்தது. 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல் ஒகாரா மாவட்டத்தின் ஹஜ்ரா ஷா முகீம் என்ற பகுதியில் ஒருவர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த சுவர் ஒன்று கனமழையால் இடிந்து விழுந்தது. சுவரின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். டோபா தேக் சிங் மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.
துபாய் நகரில் சம்மா மற்றும் மரியம் என்ற சகோதரிகள் வசி
கடந்த ஆண்டில் 70 ஏவுகணை சோதனைகள் நடத்திய வடகொரியா 2023ம
வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ந
பொதுபல சேனா இயக்கம் தொடர்ந்தும் இனவாத மற்றும் மதவாதத்
போர்ட் ஆப் பிரின்ஸ்: ஹைதியில் நேற்று முன்தினம் ஏற்பட்
தனது திருமண நிகழ்விற்கு தாமதமாக சென்ற மணப்பெண் ஒருவர்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் நர்ஸ் ப
உக்ரைனுக்கு 2023 ஆம் ஆண்டும் குறைந்தபட்சம் 2.3 பில்லியன் ப
அமெரிக்க பயங்கரவாதப் பட்டியலில் இருந்து ஈரானின் இஸ்ல
இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கொரோனா வைரஸ் ம
இந்த கன மழையால் பஞ்சாப் மாகாணத்தின் கிழக்கு பகுதி கடு
தொடர்ந்து 36வது நாளாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப
கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்ந
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க விமானப் படையின் சி-17
