இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேசமயம் குணமடைவோரின் எண்ணிக்கை உயர்கிறது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,498 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 2,89,96,473 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 2123 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,51,309 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,73,41,462 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,82,282 பேர் குணமடைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்...தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் -பிரதமர் மோடி அறிவிப்பு
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 13,03,702 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 23,61,98,726 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட வ
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு பெரும்பா
தற்சாா்பு இந்தியாவை எண்ணி நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் பெ
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள் தோறும் ஆ
ரெயில்வே துறையில் தனியாரையும் அனுமதிக்கும் திட்டத்த
வடக்கில் இருந்து இலங்கையர்கள் இந்தியாவுக்கு தப்பிச்
சென்னை இன்று நிகழும் சூரிய கிரகணம் பல உலக நாடுகளில் தெ
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் தங்கள் ந
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.
கொரோனா இரண்டாம் அலையின் கோரதாண்டவத்தை நாட்டு மக்கள் ய மேற்கு வங்காள மாநிலம் நந்திகிராம் தொகுதியில் முதல்வர இந்தியாவின் 72-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுவதை தமிழர் நலன் குறித்து பேச ராகுல்காந்திக்கு அருகதை கிடை ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிர
