கொரோனாவின் எதிரொலியாக உலகம் முழுவதும் வறுமை அதிகரித்து இருக்கிறது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் வறுமை அதிகரித்து வருவதாகவும், உலகளாவிய வறுமைக்கோடு பட்டியலில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாகவும் உலக வங்கி கூறியிருக்கிறது.
உலகளாவிய வறுமைக்கோடு மற்றும் நடுத்தர வருமான வகுப்பினரின் பட்டியலில் இந்தியாவின் பங்களிப்பு முறையே 57.3 சதவீதம் மற்றும் 59.3 சதவீதமாக அதிகரித்து இருப்பதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார். இந்த பட்டியலை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு, அதில் அவர், ‘மத்திய அரசு கொரோனாவை தவறாக நிர்வகித்ததன் விளைவுதான் இது. ஆனால் எதிர்காலம் குறித்து நாம் தற்போது சிந்தித்தாக வேண்டும். பிரதமர் தனது தவறுகளை ஒப்புக்கொண்டு, வல்லுனர்களின் உதவியை கோருவதில்தான், நமது நாட்டை மறுகட்டமைக்கும் பணி தொடங்கும். மறுத்து வாழ்வது எதற்கும் தீர்வாகாது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு நாளை (புதன்கிழமை) பிறந
டெல்லியில் குடியரசு தினத்தன்று திட்டமிட்டப்படி டிரா
கோவிஷீல்டு தடுப்பூசியில் உள்ள மூலப்பொருள்களால் கடும
நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியில் எழுந்த உட்கட
சமையல் சிலிண்டர் விலை மாதந்தோறும் உயர்ந்து வரும் நிலை
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, மாட்டு பொங்கலை தொடர
தமிழகத்தில் தைப்பூசத் திருவிழாவையொட்டி முதன்முறையாக
இந்திய காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியக
பிரதமர் மோடி, ஆட்சியின் தலைவராக தொடர்ந்து 20 ஆண்டுகள் ப
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகா மாநிலத்தை சே
