கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்து நல்ல பலன் அளிப்பது தெரியவந்ததையடுத்து இந்த மருந்தை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. மருந்துக்கு பல்வேறு மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து வாங்கும் நிலை ஏற்பட்டது.
இந்த சூழலைப் பயன்படுத்தி, சிலர் ரெம்டெசிவிர் மருந்துகளை போலியாக தயாரித்து மக்களிடம் விற்பனை செய்யத் தொடங்கி உள்ளனர். அவர்களை போலீசார் கண்டறிந்து நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம், ரோபார் பகுதியில் போலி ரெம்டெசிவிர் மருந்து தயாரிப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலி ரெம்டெசிவிர் மருந்து தயாரித்தது கும்பல் சிக்கியது. போலி மருந்து ஆலையின் உரிமையாளர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, போலி மருந்து தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருட்கள், டிசைன்கள், குப்பிகள் மற்றும் 2 கோடி ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதன்மூலம் பல கோடி ரூபாய் மதிப்பிலான போலி மருந்து வணிகம் தடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தொழிலதிபரை மணந்த சில நாட்களில் கன்னட நடிகை ஒருவர் பின
பணத்துக்காக 27 பெண்களை ஏமாற்றி கல்யாணம் செய்த 54 வயதான நப
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் நிறைய புகார்கள்
வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள்
சென்னை: 72-வது குடியரசு தினத்தையொட்டி சென்னை கோட்டையில்
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த வீடு வீடாக சென்று&
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற ப
கொரோனா தொற்று லேசாக இருப்பவர்கள் வீடுகளில் தனிமைப்பட
கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறி
சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை ப
தூய்மை நகரங்களின் பட்டியலில் தமிழ்நாடு பின்தங்கியுள
அண்ணாவின் 113-வது பிறந்த நாளை முன்னிட்டு, அண்ணாசாலையில்
