டெல்லியில் உள்ள சந்தைகள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதை தீவிரப்படுத்துவது குறித்து டெல்லி காவல் துறை ஆணையா் எஸ்.என். ஸ்ரீவாஸ்தவா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, மாவட்டம், தானா அளவிலான பொது சுகாதார மேலாண்மைய குழுக்களை அமைத்து கொரோனா 3-வது அலையைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார். இந்தக் குழுவினா் பொது சுகாதார அவசர நிலை அறிவுறுத்தல்கள், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்கு செல்வது, முதியோருக்கான உதவி, ஏழைகளுக்கு ரேஷன் பொருள்கள் சென்றடைவது உள்ளிட்ட பல்வேறு வகையான விவகாரங்களுக்கு அறிவுரை வழங்குவார்கள். போலீசார் அபராதம் விதித்தாலும் மக்கள் 100 சதவீதம் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை.
ஆகையால், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றும் வகையில் இந்தக் குழுவினா் தேவையான முயற்சிகளை மேற்கொள்வார்கள் என்று டெல்லி காவல் துறை ஆணையா் ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து மீது மோதி கார் தீப்ப
ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிர
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மத்திய மந்திரிகளுக்கு த
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,982 பேருக்கு கொரோனா வ
கோவையில் இருந்து திருப்பூருக்கு சென்ற அரசுப்பேருந்த
மகாராஷ்டிராவில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையி
இந்தியாவுக்கு எதிரான சர்வதே சதி நடக்கிறது என்று மத்
அரசியல், மத கூட்டங்களை நிறுத்தவில்லை என்றால் கொரோனா வ
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையால் எழுந்துள்ள மோசமா
பிரதமர் நரேந்திர மோடியின் 71-வது பிறந்த நாள் கொண்டாடப்ப
