நடிகை நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இவற்றில் ‘நெற்றிக்கண்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து, விரைவில் வெளியாக உள்ளது. இதில் அவர் பார்வையற்றவராக நடித்து இருக்கிறார்.
அதேபோல் ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்திலும் நடித்து முடித்து விட்டார் நயன்தாரா. இந்த படத்தில் அவர் வக்கீல் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அவர் நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை அவரது காதலர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.
இதையடுத்து நடிகை நயன்தாரா மேலும் 3 புதிய படங்களில் நடிக்க இருக்கிறாராம். அதில் ஒருபடம் மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளார். மற்ற 2 படங்களும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்டவையாம். தமிழில் தயாராகும் இந்த படங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாரா மற்றும் ஜெயம் ரவி இருவரும் தனிஒருவன் படத்தில
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘அதிகா
2021 ஆம் ஆண்டுக்கான ஒஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருக
விஜய் நடிப்பில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தை நெல்சன்
நவரசா என்னும் ஆந்தாலஜி திரைப்படம், மனித உணர்வுளான கோப
அட்டக்கத்தி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ச
நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் 'எண்ணித் துணிக'
அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான ஆனந
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தன்னுடைய ஸ்டைலில் நடி
சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற
நடிகை நயன்தாரா ரசிகர்கள் பெருமையாக கொண்டாடும் லேடி சூ
கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் ஜ
சூது கவ்வும், தெகிடி படங்களின் மூலம் பிரபலமான அசோக் செ
அஜித்தின் வலிமை படம் இன்று ரிலீஸ், காலை முதலே சினிமா ரச
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஓடிய ஒரு நிகழ்
