ஆப்பிரிக்க நாடான ஐவரிகோஸ்ட்டில் 2007-12 கால கட்டத்தில் பிரதமர் பதவி வகித்தவர், குய்லூம் சோரோ (வயது 49).
இவர் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர் தற்போது நாட்டை விட்டு ஓடி பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் இவர் மீதான வழக்கு விசாரணை அபித்ஜான் நகர கோர்ட்டில் நடந்து வந்தது. ஐவரிகோஸ்ட் அரசின் அமைப்புகளை இழிவுபடுத்தும் வகையில் போலி செய்திகளை பரப்பியதாகவும், வெளியிட்டதாகவும் அவர் மீதும், அவரது ஆதரவாளர்கள் 19 பேர் மீதும் வழக்கு விசாரணை நடைபெற்றது.
இந்தநிலையில் விசாரணை முடிவில் குய்லூம் சோரோ மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக கூறிய கோர்ட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது.
இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், இந்த தண்டனையை தான் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், இதை எதிர்த்துப்போராடப்போவதாகவும் அறிவித்துள்ளார். அவரது அரசியல் இயக்கத்தை கலைக்க உத்தரவிட்ட கோர்ட்டின் முடிவை அவர் விமர்சித்துள்ளார்.
அந்தப் பதிவில் அவர், “இந்த நியாயமற்ற தீர்ப்பை முழுமையாக நிராகரிக்கிறேன்” என கூறி உள்ளார்.
இவர் 2020-ல் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக 2019-ல் அறிவித்தார். ஆனால் அவர் போட்டியிட அனுமதி அளிக்கப்படவில்லை. அந்த தேர்தலில் தற்போதைய அதிபர் அலசேன் ஒட்டாரா வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனில் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி (Volodymyr Selensky)தலைமைய
அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை கலாசாரம் வளர்ந்து வ
முதன் முறையாக ஜெர்மனியில் டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு உதவும்
மியான்மரில் 76 ஆயுதப்படை தினம் கொண்டாடப்பட்ட அதே நேரத
உக்ரைன் மீது ரஷியா இன்று 13-வது நாளாக போர் தொடுத்து வர
ரஷியா - உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா ரஷியாவை தொடர
ரஷ்ய அதிபரின் சொத்துக்கள் முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப்
பேஸ்புக் நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக வல
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
ஆப்கானிஸ்தானின் குந்தூஸ் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்ற
ஐரோப்பியர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவை கண்ட
அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு அமைப்பு ஸ்பேஸ் எ
அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமெரிக்கத் தடைகள் ந
