மைசூரு மிருகக்காட்சி சாலை ஊழியர்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மைசூரு மிருகக்காட்சி சாலையில் நடந்தது.
இதில் கர்நாடக பாஜக துணை தலைவரும், முதல்-மந்திரி எடியூரப்பாவின் இளைய மகனுமான விஜயேந்திரா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் முதல்-மந்திரி மாற்றப்படுவார் என்பது முடிந்து போன கதை. அதனால் முதல்-மந்திரி மாற்றம் குறித்து யாரும் பேச வேண்டாம். மீதம் உள்ள 2 ஆண்டுகளும் எடியூரப்பா தான் முதல்-மந்திரியாக இருப்பார். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.
கர்நாடக பாஜகவினர் டெல்லிக்கு சென்றால் தலைமை மாற்றம் குறித்து தான் பேச போகிறார்கள் என்று அர்த்தமா?. டெல்லிக்கு செல்பவர்கள் அவர்களது சொந்த வேலையாக கூட செல்லலாம். டெல்லிக்கு செல்ல கூடாது என்ற எந்த நிபந்தனைகளும் இல்லை. இதனால் கா்நாடக பா.ஜனதாவினரின் டெல்லி பயணத்திற்கு யாரும் அரசியல் சாயம் பூச வேண்டாம்.
தேர்வு எழுதி உள்ளேன். முடிவுக்காக காத்து இருக்கிறேன் என்று மந்திரி சி.பி.யோகேஷ்வர் கூறி உள்ளார். அவரது கருத்தை பற்றி விவாதம் நடத்த வேண்டியது இல்லை.
கர்நாடக பாஜக மேலிட பொறுப்பாளர் அருண்சிங் கர்நாடகம் வந்து எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தி சென்று உள்ளார். தேசிய தலைவர்களும் எடியூரப்பா ஆட்சியை பாராட்டி உள்ளனர்.
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.
பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கா
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி 22-ந் தேதி
வழக்கு நிலுவையில் இருப்பதால் அதிமுகவின் பொதுச் செயலா
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருச்சி மத்திய
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு
கோவையில் இருந்து திருப்பூருக்கு சென்ற அரசுப்பேருந்த
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு
இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் மருத்துவ சிக
கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜ
சரியான திட்டமிடுதல் இல்லாததால் மராட்டிய அரசு 5 லட்சம்
மக்கள் பிரதிநிதிகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனு
ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை
ஆலங்குடி அருகே சித்தப்பாவால் பாலியல் வன்கொடுமைக்கு உ
மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்த, காங்கிரசை உள்ளடக்கிய
