இஸ்ரேல் நாட்டில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு வெகுவாகக் குறைந்தது. மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டதை அடுத்து, கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளன. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. மாஸ்க் விதிமுறைகளும் படிப்படியாக தளர்த்தப்பட்டன.
கொரோனா வைரஸ் பரவல் மிகவும் குறைந்ததையடுத்து, பொது இடங்களில் உள்ள உள்அரங்கங்களில், மக்கள் முக கவசம் அணிய தேவையில்லை என கடந்த 15ம் தேதி சுகாதாரத்துறை தெரிவித்தது. இதனால் பொதுமக்கள் உற்சாகமடைந்தனர்.
இந்நிலையில், கடந்த 4 தினங்களாக புதிய பாதிப்பு 100ஐ தாண்டியது. நேற்று 227 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே, வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், மீண்டும் மாஸ்க் தொடர்பான விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. மக்கள் இனி பொது இடங்களில் உள்ள உள்அரங்கங்களுக்கு சென்றால் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதன்முதலில் காணப்பட்ட கொரோனா வைரசின் டெல்டா மாறுபாடு காரணமாக, இஸ்ரேலில் பாதிப்புகள் அதிகரித்திருக்கலாம் என தொற்றுநோய் பணிக்குழு தலைவர் நாச்மேன் ஆஷ் கூறினார்.

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் ஒரே நாள் இரவில் மழையும்,
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முதலாக க
நவம்பரில் எட்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்க
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரி
கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஷேக் ஜர்ராவில் பாலஸ்தீன குடு
அமெரிக்காவில் நெப்ராஸ்கா மாகாணம் ஒமாஹா நகரில் வெஸ்ட்
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரை சேர்ந்தவர் அயன்னா வில்லிய
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த மே
வடக்கு ஆப்கானிஸ்தானில் நுழைந்து தலிபான் தீவிரவாத படை
உக்ரைனில் ரஷ்யத் துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்
மரியுபோல் நகரில் சரணடைவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை எ
சீனாவின் அவசரகால டீசல் விநியோகத்தை மீண்டும் செயற்படு
சீன வெளிவிவகார அமைச்சர் வேன் வீ எதிர்வரும் ஜனவரி மாதம
ரஷ்யாவிடம் இருந்து பெறும் மசகு எண்ணெய்க்கு அமெரிக்கா
பிபிசி உலக செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா அந்
