புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசியினை பெற்றுக்கொண்ட பலர் ஒவ்வாமை காரணமாக மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு நேற்று 20 பேர் வரையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதனை விட முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் பலர் தர்மபுரம் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றியபோதும் மயங்கி விழுந்துள்ள பலர் மற்றும் வீடுகளில் இருந்த பலருக்கும் ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் இதுவரை 20 பேர் வரையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 16 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்கள்.
இச்சம்பவத்தினை தொடர்ந்து நிர்வாகம் ஆடைத்தொழில்சாலையின் நடவடிக்கைகளை நிறுத்தி பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளது.
ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றி வரும் 1126 பேரில் இதுவரை 900 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்ட நிலையில் விருப்பம் கொள்ளாத சிலருக்கு தடுப்பூசி ஏற்றப்படவில்லை.என்பதும் குறிப்பிடத்தக்கது
உயர்ந்த கட்டிடங்களுக்கு மாறாக ரம்மியமான ச
அகில இலங்கை தமிழ் மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட நாடா
கண்டி பகுதியில் ஒரு நாய்க்கு பிறந்த பச்சை நிறக்குட்டி
வடக்கு மாகாணத்தில் கொரோனாத் தடுப்பூசிகளைப் பெறுவதில
பிரதமர் பதவியை துறக்கப் போவதாக வெளியாகும் தகவல்களில்
அரசினால் நாடுபூராகவும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்ட
ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு
தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவு தினம் இன்று யாழ்
காலாவதியான சாரதி அனுமதி பத்திரத்தின் செல்லுபடியாகும
யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்த
எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இ
காலநிலை மாற்றத்தால் இலங்கை மிகவும் பாதிப்படைவதாக ஜனா
பதுளை − ஹாலிஎல பகுதியில் பாடசாலை மாணவியை கோடாரியால்
குளுக்கோமா நோயினால் கண் பார்வை இழக்கும் அபாயம் அதிகம்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தீவிரமடைந்துள்
