வவுனியாவில் 22 வயதுடைய இளம் குடும்ப பெண் ஒருவரை காணவில்லை என அவரது தாயாரால் வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பெண் கொக்குவெளி மகாறம்பைக்குளம் அரசடி வீதியில் வசிக்கும் 22 வயதான கண்ணன் வினித்தா என்பவரே காணாமல் போயுள்ளார்.
இவ் விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது.
குறித்த பெண் நேற்றுமுன்தினம் (04)ம் திகதி மாலை 6 மணியளவில் தனது அம்மாவின் வீட்டிலிருந்து அருகாமையில் உள்ள கடைக்கு சென்று முட்டை வேண்டி வருவதாக கூறிவிட்டு வெளியேறி சென்றுள்ளார். இந்நிலையில் பலமணிநேரங்கள் தாமதமாகியும் குறித்த பெண் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், உறவினர்கள் நண்பர்களின் வீடுகளுக்கும் தொடர்பு கொண்டு கேட்ட போது அங்கும் அவர் செல்லாத காரணத்தினால் குடும்பத்தினர் நேற்று (05) வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளார்கள்.
குறித்த குடும்பபெண் திருமணம் முடித்து ஐந்து வருடங்களாக வாழ்ந்து வருவதாகவும் சில நாட்களாக கணவரை பிரிந்து தாயாருடன் வாழ்ந்து வந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர் தொடர்பில் விபரங்கள் கிடைக்கப்பெற்றால் வவுனியா காவற்துறையினருக்கோ அல்லது கீழ் காணப்படும் தாெலைபேசி இலக்கத்துக்கோ தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறு அவரின் தாயார் தெரிவித்துள்ளார்.
தொடர்புகளுக்கு: 0765462984


பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டம் இன்று (
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் உயிரிழந்த
வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு ப
பதுளை பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அ
வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொது இடங்களை தூ
வவுனியா புளியங்குளம் பகுதியில் காயமடைந்த நிலையில்
கொழும்பு பம்பலப்பிட்டியில் ஏழு மாடி கட்டிடத்தில் இரு
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிர
நாட்டின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் நான்கு பேர் சரியா
நேற்று (01) இரவு 8.15 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து கொழும்
மட்டக்களப்பு வாவிக்கரை முதலாம் வீதி வாவியில் ஆணொருவர
தொல்பொருள் திணைக்களம் வட கிழக்கு பிரதேசங்களில் தொடர்
இலங்கையின் மத்திய வங்கியானது முக்கிய அறிவிப்பு
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு, ஒத்துழைப்பதாக த
பாணந்துறையில் உள்ள விகாரைக்கு அருகாமையிலுள்ள கற்பாற
