ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்கு” என்ற திட்டத்தின்கீழ் கிராமிய தொழிற்துறையை விருத்தி செய்யும் விதமாக “சௌபாக்கிய உற்பத்திக் கிராமங்கள்” உருவாக்கப்பட்டுள்ளன
இன்றையதினம் இந்த செயற்றிட்டத்தின் தேசிய அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் மகிந்த ராஜபக்ச, சௌபாக்கிய உற்பத்திக் கிராமங்களை நிகழ்நிலை தொழில்நுட்பத்தினூடாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் சௌபாக்கிய உற்பத்திக் கிராமங்களில் ஒன்றான சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குற்ப பண்டத்தரிப்பு, பிரான்பற்று கிராமத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதனால் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது பாரம்பரிய முறையிலான எள்ளெண்ணை உற்பத்தி தொழில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அத்தோடு பயனாளிகளுக்கான காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன், சண்டிலிப்பாய் பிரதேச செயலக செயலாளர், கிராம சேவையாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும், பிரான்பற்று கிராமத்தின் பயனாளிகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


அமெரிக்காவிற்கு பயணிக்க மோசடி செய்பவர்களால் விளம்பர
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டம் இன்று (
ஒக்டோபர் 28 ஆம் திகதி முதல் நாளொன்றுக்கு 08 முதல் 10 மணிநேர
நாட்டின் பொருளாதார பயணத்தை நம்பகமான எதிர்காலமாக விவச
கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் - காங்கேசன்து
60 விதமான மருந்துகளின் விலையை 40 வீதத்தால் அதிகரிக்கப்ப
மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை பிரதி முகாமையாள
நீதிமன்றங்களிலும் வழக்குக்கோவைகள் குவிந்து கிடக்கின
நாட்டில் தேங்காய் எண்ணெய்க்கும் வரிசையில் காத்திருக
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ர
சுமந்திரனால் முன்னெடுக்கப்படும் பயங்கரவாத தடைச்சட்ட
மட்டக்களப்பு கரடியனாறு காவற்துறை பிரிவிலுள்ள மரப்பா
வளவை ஆற்றில் நீராட சென்ற நிலையில், பாடசாலை மாணவி ஒருவர
யாழ். கொழும்புத்துறை பிரதான வீதியில் சுண்டிக்குளி பகு
இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்
