அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்குமார், வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எத்தகைய முடிவை எடுப்பார் என்ற கேள்வி அரசியல் களத்தில் எழுந்துள்ளது.
20 ஐ ஆதரித்திருந்தாலும் ஆளுங்கட்சியில் இணைவது தொடர்பான அறிவிப்பை அரவிந்குமார் இன்னும் வெளியிடவில்லை. ஆளுந்தரப்பில் இருந்து அவருக்குப் பதவிகள் எதுவும் வழங்கப்படவும் இல்லை. எதிர்காலத்தில் வழங்கப்படுமா என்பது பற்றியும் எதுவும் அறிவிக்கப்படவும் இல்லை.
எனவே, எதிரணியில் இருந்து 20 இற்காக அரசுக்கு ஆதரவு வழங்கியதுபோல், நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போதும் அரவிந்குமார் . உதய கம்மன்பிலவை ஆதரித்து பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கக்கூடும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
குறிப்பாக வாக்கெடுப்பில் அவர் பங்கேற்காமல் இருந்தால்கூட, பிரேரணையை ஆதரித்து வாக்களிக்கும் நிலைப்பாட்டை எடுக்கவேமாட்டார் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேவேளை, இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்படாததாலும், மக்களின் பக்கம் நின்றும் பிரேரணைக்கு அரவிந்குமார் ஆதரவு வழங்கக்கூடும் எனவும் அவருக்கு நெருக்கமான சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
பொலிஸ் உத்தரவை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கிப்ரயோ
கொழும்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய போரா
புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு ஆதரவு கோரப்படுவதா
பெருந்தோட்டப் பிரதேசங்களில் நீரேந்து பகுதியில் இருந
நேற்று (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த எரிவாயு விலை தி
பிலவ வருட தமிழ் புத்தாண்டை கொண்டாடும் சகல மக்களுக்கும
வாகனங்கள் மற்றும் நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும்
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையினை தொடர்ந்து மல
கொழும்பு − கிரான்ட்பாஸ் − கஜீமா தோட்டத்தில் நேற்று
பெருந்தொற்றுச் சூழலில் சுதந்திர தின விழாவொன்று இடம்ப
தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் உரிமை நாட்டுமக்கள் அ
அனைத்து அரசாங்கப் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவிலும் உள
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியிலிருந்து
பதுளை - ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவர
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பிரதே
