சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவும், வசதிக்காகவும் வரும் திங்கட்கிழமை முதல் வார நாட்களில் (திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை) மெட்ரோ ரெயில் சேவைகள் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்பட உள்ளன.
நெரிசல்மிகு நேரங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
கடந்த மாதம் 21-ம் தேதி முதல் கடந்த 9-ம் தேதி வரை 40 பயணிகளிடம் இருந்து அபராதமாக ரூ.8 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ளதால் நாளை முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட உள்ளது. அதாவது ஒரு மணி நேரம் கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் மாநகராட்சி
உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து உயிரிழந்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமா
இந்தியாவின் சொத்துகளை நட்பு முதலாளிகளிடம் விற்பனை செ
இலங்கை வசமுள்ள படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி இராம
மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர்
உத்தர பிரதேசம் மாநிலத்தில் பூர்வாஞ்சல் விரைவு சாலை 341 சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை ப பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதம நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சி தலைமைக்கு எதிர 1, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் அங்கீகாரம் இல்லாத மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் தங்கள் ந நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா 3 நாள் பயணமாக இந்திய புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் அடு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையி
