சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமியின் சிறைச்சாலை மரணத்தை கண்டித்து, ஈரோட்டில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி, ஜார்க்கண்ட் மாநில பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக, தனது வாழ்வை அர்ப்பணித்தவர் ஆவார். தீவிரவாதிகளுடன் தொடர்பு என குற்றம்சாட்டி கைது செய்யப்பட்ட அவர், உடல்நல குறைவால் சிறைச் சாலையில் மரணமடைந்தார்.
ஸ்டேன் சுவாமிக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் அவர் உயிரிழந்ததாக கூறி மத்திய அரசை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனையொட்டி, ஈரோடு கருங்கள்பாளையம் காந்தி சிலை அருகில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் ப.முகமது லுக்மானுல் ஹக்கீம் தலைமையில், பொருளாளர் முகமது யூனுஸ், மாவட்ட துணைத் தலைவர் குறிஞ்சி பாஷா, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் யாஹ்யா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி மீது போலியான வழக்கு புனையப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காத ஒன்றிய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கா
ஆந்திராவில் நடந்த சாலை விபத்தில் 5 பெண்கள் உட்பட 8 தமிழ
தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு கடந்த 2017-ம் ஆண்டு முதல் நட
அசாம் சட்டசபைக்கு 3 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு நடந்
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூச
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் அடு
உத்தரகாண்ட் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாண
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம
அதிமுகவை வழி நடத்தப்போவதாக சசிகலா அக்கட்சி தொண்டர்கள
மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 28,699 பேருக்கு கொரோனா வைர
கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்தவர் ரமேஷ்
உலகில் ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் எந்தவொரு பிரதிபல
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே
சேலம் உ
