பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சுலு மாகாணத்தின் ஜோலோ தீவுப்பகுதியில் 96 பேருடன் சென்ற சி-130 ரக ராணுவ விமானம் தரையிறங்க முயற்சிக்கும் போது விபத்துக்குள்ளானது என அந்நாட்டு ராணுவ ஜெனரல் சிரிலிட்டோ சோபேஜனா கூறினார்.
இந்த விபத்தில் 29 வீரா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். விமானம் மோதியபோது அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் 6 பேர் பலத்த காயமடைந்தனா். அவா்களில் இருவா் உயிரிழந்தனா் என முதல் கட்ட தகவல் வெளியானது.
சம்பவ இடத்தில் மீட்புப் பணி துரிதப்படுத்தப்பட்டு 50-க்கும் மேற்பட்ட வீரா்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா்.
இந்நிலையில், பிலிப்பைன்ஸ் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. 40-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்தான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல
பிரித்தானிய முன்னாள் இராணுவ விமானிகள் சீன இராணுவத்தி
ரிஷி சுனக் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டியில் வெற்றி
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பாட
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். கடந
ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் பதுங்கியிருக்கும் பயங்கரவ
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய
உக்ரைன்-ரஷ்யாவிடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நட
கத்தார் நாட்டின் தோகா நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடத
