பாகிஸ்தானில் 65 பில்லியன் அளவில் முதலீடு செய்து சீனா பல்வேறு கட்டுமான பணிகளை செய்து வருகிறது. சீனா- பாகிஸ்தான் பொருளாதார காரிடார் என்ற பெயரில் சீனா முதலீடு செய்து, பாகிஸ்தானில் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக டசு அணையில் நீர்மின்திட்டம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சீனாவை சேர்ந்த தொழிலாளர்கள், பொறியாளர்கள் வேலைப்பார்த்து வருகின்றனர். உப்பேர் கோஹிஸ்தானில் நடைபெற்று வரும் இந்த பணிக்காக தொழிலாளர்கள் பேருந்தில் சென்று வருவார்கள்.
அவ்வாறு இன்று பேருந்தில் செல்லும்போது, திடீரென பஸ் வெடித்து சிதறி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சீனாவைச் சேர்ந்த 7 பொறியாளர்கள், 2 ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 39-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பொருள் வெடித்து விபத்து ஏற்பட்டதா? அல்லது பேருந்திற்குள் இருந்த பொருள் வெடித்து விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்த தெளிவான தகவல் வெளியாகவில்லை.
காயம் அடைந்தவர்களை ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு மருத்துவமனைகளில் சேர்க்க அரசின் அனைத்து துறைகளும் ஒன்றாக இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்ள ஒரு தங்க சுரங்கத்தில்
உக்ரைனில் போர்க்குற்றங்களைச் செய்யும் எந்தவொரு ரஷ்ய
பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள சுக்குர் ரோகி என்ற
தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் நீண்ட காலமா
பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் பலரிடம
உக்ரைன் தலைநகர் கீவ் மீது இன்னும் ஒரு சில தினங்களில் ர
ராஜஸ்தானில் ஒரே இரவில் வெவ்வேறு நபர்களால் பெண் ஒர
ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்ட
இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே 2 நாட்கள் பயணமாக நேற்ற
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரி
கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் உள்ள மாமிச உணவுப்ப
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
உலக நாடுகள் இந்த போரை இனியும் வேடிக்கை பார்க்கக் கூடா
1990 ஆம் ஆண்டு சோவியத்தை தகர்த்தவர்கள் தங்கள் கனவு நிறைவ
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹோப் விண்கலம் வெற்றிக்கரமாக ச
