தெல்லிப்பழை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு நாள்களுக்கு முன் வீடொன்றை உடைத்து பெறுமதியான பொருள்களைத் திருடிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடமிருந்து திருடப்பட்ட ஐ போன் ஒன்று, நான்கு சைக்கிள்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
சுன்னாகம் மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடைய இருவரே நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தெல்லிப்பழை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் இரண்டு நாள்களுக்கு முன்னர் திருட்டு இடம்பெற்றிருந்தது. அதுதொடர்பில் தெல்லிப்பழை காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.
விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், சந்தேகநபர்கள் இருவரைக் கைதுசெய்ததுடன் திருட்டுப் பொருள்களையும் அவர்களிடம் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவருக்கும் வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் காவல்துறையினர் கூறினர்.
மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய
கொவிட் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் சில நாடுகளி
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் யார் ஜனாதிபதியாக இரு
பாண்டியன் குளம் கரும்புள்ளியான் பகுதியில் நேற்று ந
சிவனொளிபாத மலையை தரிசனம் செய்து விட்டு வீடு திரும்
நீதி அமைச்சினால் சமாதான நீதிவான்களாக நியமிக்கப்பட்ட 1
2022 ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் முழுமையான தடுப்பூசி செ
வல்வெட்டித்துறையில் இன்று மேலும் 40 பேருக்கு தொற்று உள
இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களை மோதவிட்டு ராஜபக்ச
குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் விகாரைய
இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில்
இலங்கையில் தீவிரமடைந்துள்ள இராணுவத்தின் அழுத்தம் கா
நாட்டில் எந்தவொரு குடிமகனும் உணவுப் பற்றாக்குறையால்
கொவெக்ஸ் சலுகையின் கீழ் 40 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை
பொரளை சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவற
