மட்டக்களப்பு வாழைச்சேனையில் இருந்து குருநாகலுக்கு கனரகவாகனமான கெண்டனர் சட்டவிரோதமாக 410 மூடை சிப்பியை கடத்தி செல்லப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை (17) அதிகாலையில் வாழைச்சேனை நாவலடிசந்தியில் வைத்து 3 பேரை கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.
வாழைச்சேனை காவற்துறை பிரிவிலுள்ள கொழும்பு திருகோணமலை பிரதான வீதிச்சந்தியான நாவலடிச் சந்தியில் சம்பவதினமான இன்று அதிகாலை 3 மணியளவில் வீதிச்சோதனை நடவடிக்கையில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்போது வாழைச்சேனையில் இருந்து கொழும்பு நோக்கி பிரயாணித்த கெண்டனர் ரக வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர் இதன்போது சட்டவிரோதமாக தலா 50 கிலோ கொண்ட 410 மூடை சிப்பிகளை குருநாகலுக்கு கடத்திச் செல்வதாக கண்டறிந்ததையடுத்து அதனை கடத்திச் சென்ற 3 பேரை கைது செய்ததுடன் சிப்பியுடன் கெண்டனர் வாகனத்தை மீட்டு வாழசைச்சேனை காவற்துறையினரிடம் ஓப்படைத்துள்ளதாகவும்
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் இன
இலங்கையில் இடம்பெறும் சித்திரவதைகள் பாலியல் வன்முறை
நாட்டின் அனைத்து ஆசிரியர்களும், அதிபர்களும் இன்று எதி
கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் அதிகாரிகளின் நடவடிக்கைய
கொலன்ன பகுதியில் கொள்ளையிடப்பட்ட இரண்டு மோட்டார் சைக
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சொத்துக்களில் பெ
பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்
யாழ்ப்பாணம்- மீசாலை பகுதியில் மேய்ச்சலுக்கு மாட்டை கொ
காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை நிறைவுக்கு க
செப்டம்பர் 2021 முதல் ஓகஸ்ட் 2022 வரை 53 நாடுகளில் உணவுப் பாத
சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடுவதற்கு மக்கள் அ
கோவக்ஸ் திட்டத்தின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தால் வழங
கொழும்பு மாவட்டத்தில் ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவர
நாட்டின் சொத்துக்களையும் இறைமையையும் தாரைவார்க்கும்
நாடு முழுவதும் வார இறுதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்
