வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கோணலிங்கம் கருணாணந்தராசா, தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்டோருக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளார்.
வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் பதவியிலிருந்து வரும் ஜூலை 31ஆம் திகதியுடன் விலகுவதாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் அந்தக் கட்சியின் நகர சபைத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.இந்த நிலையில் தமிழ் தேசியக் கட்சியை எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் ஆரம்பித்த நிலையில் அவர்களுடன் இணைந்து செயற்படுவதால் தமிழ் அரசுக் கட்சி அவரை வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் பதவியிலிருந்து நீக்க முயற்சித்தது.
எனினும் அது பின்னர் கைவிடப்பட்டது.இந்த நிலையில் தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நகர சபைத் தலைவராகத் தொடர அவர் விரும்பாத காரணத்தினால் பதவி விலகுகின்றார் என்று தவிசாளர் கோ.கருணாணந்தராசா தெரிவித்தார்
காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த, வாழைச்சேனை பொலி
வவுனியாவில் கொவிட் தொற்று காரணமாக இருவர் மரணமடைந்துள
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள குருதி சுத்த
பண்டாரவளை - எலபெத்த கும்புர தகுன கெபிலேவெல பகுதியில் ப
கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த இலங்கை போக்
சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களுக்
பெண்களின் உரிமைகள் தொடர்பில் முடிவெடுக்கும் அதிகா
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்க
நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள 43,000 மெட்ரிக் டன
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் உயர் நீதிமன்ற வளாகம்
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு மகசீன் ச
இலங்கைக்கு தேவையான எரிபொருளை ஏற்றிய 5 கப்பல்கள் எதிர்
மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்குதுறையின்
இலங்கை முழுவதும் ராஜபகசர்களுக்கு சொந்தமான சொத்துக்க
இலங்கையின் மூத்த கல்வியியல் பேராசிரியர் சோ.சந்திரச
