நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் நீதிமய்யம் கட்சி படு தோல்வியை சந்தித்தது. அக்கட்சியில் போட்டியிட்ட அத்தனை வேட்பாளர்களும் தோல்வி அடைந்தனர். கட்சியின் தலைவர் கமல்ஹாசனே தோல்வியுற்றார். ம.நீ.மய்யத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட கட்சிகளும் தோல்வியை சந்தித்தன.
தேர்தல் தோல்விக்கு பின்னர் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அக்கட்சியில் இருந்து வெளியேறிவிட்டனர். பல நிர்வாகிகள் திமுகவில் இணைந்துவிட்டனர்
மதுரவாயல் சட்டமன்ற வேட்பாளராக களமிறங்கிய பத்மபிரியா மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துவிட்டார். இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் உடுமலைப்பேட்டை வேட்பாளர் ஸ்ரீநிதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் அகில இந்திய பொதுச்செயலாளர் தமிழக பொறுப்பாளர் தினேஷ்ராவ் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இந்த நிகழ்வின் போது கே.வி.தங்கபாலு , ஜோதிமணி எம்.பியும் உடன் இருந்தனர். ஸ்ரீநிதி காங்கிரசில் இணைந்தது குறித்து ஜோதிமணி ‘’தலைவர் ராகுல்காந்தி அவர்களின்பால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் கட்சியில் இணைய ஏராளமான இளைஞர்களும் பெண்களும் தயாராக இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி உறுதியோடு களத்தில் நின்று மக்கள் விரோத மோடி அரசை வரும் தேர்தலில் வீழ்த்தும். மகிழ்ச்சி ஸ்ரீநிதி. இணைந்து பயணிப்போம்’’என்று தெரிவித்திருக்கிறார்.

கொரோனா இரண்டாம் அலையின் கோரதாண்டவத்தை நாட்டு மக்கள் ய
நாடாளுமன்ற மழைக்காலக்
நாடு முழுவதும் விஜயதசமி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்ட தென்கொரிய நாட்டின் ராணுவ மந்திரி சூ வூக் 3 நாள் அரசு மு நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,146 பேருக்கு புதிதாக திமுக அரசு அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான குரூப் 2 மற்று தூய்மை நகரங்களின் பட்டியலில் தமிழ்நாடு பின்தங்கியுள வேலை நிறுத்தம் மற்றும் விடுமுறைகள் காரணமாக கடந்த வாரத தேர்தல் வியூகங்களை வகுப்பதில் வல்லுனராக கருதப்படுபவ சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதால புதுச்சேரியில் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி தொடர்ந்து கொரோனா மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி நகரில் பிரதமர் மோடி ரூ.1,500
