ரோஜாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக பலரும் புகார் வாசித்ததால் அவர் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ஆந்திராவில், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரோஜா. நகரி தொகுதியில் போட்டியிட்டு வென்ற ரோஜாவுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படுகிறது என்ற பேச்சு நிலவியது. ஆனால் அந்த வாய்ப்பு அமையவில்லை என்றதும், ரோஜாவுக்கு முக்கிய பதவி வழங்கவேண்டும் என்ற பேச்சு எழுந்தது.
இதையடுத்து, தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவர் பதவி ரோஜாவுக்கு வழங்கப்பட்டது. தற்போது அந்த பதவியில் இருந்து ரோஜா நீக்கப்பட்டு புதிய தலைவராக மேட்டு கோவிந்த ரெட்டி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
ரோஜா மீது குவிந்த புகார்கள்தான் இதற்கு காரணம் என்கிறது கட்சி தலைமை. புத்தூர், நகரி நகராட்சி தேர்தல்களில் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து பலர் களம் இறங்கியிருக்கிறார்கள். ரோஜாவின் நடவடிக்கைகளினால்தான் வேட்பாளருக்கு எதிராக பலர் இறங்கியிருக்கிறார்கள் என்று புகார்கள் குவிந்ததால், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ரோஜா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வ
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24-ந
வீட்டில் துாங்கி கொண்டிருந்த தம்பியை,அண்ணன் சரமாரியா
இந்தியாவில் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்து
இறைவனின் நேசத்துக்கு உரியவராக வர்ணிக்கப்பட்டவர் இப்
தமிழ்நாடு பா.ஜ.க.மாநில துணைத் தலைவராக இருந்த அண்ணாமலைய
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை இன்ற
உலகம் முழுவதையும் கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் த
வளிமண்டல சுழற்சி காரணமாக குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்க
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனது அலுவலகத்த
முஹம்மது நபியைப் ப
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம், நாகை
பிரச்சாரத்தில் பழக்க தோஷத்தில் தங்க தமிழ்ச்செல்வம் இ
பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து நேற்று பாக்
