2 தவணை தடுப்பூசிகளையும் அதிகமாக செலுத்தி கொண்டவர்களில் நாட்டிலேயே சென்னை முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனாவிலிருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஆயுதம் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. தமிழகத்தில் மாவட்ட வாரியாக தடுப்பூசி முகாம் இயங்கி வருகிறது. சென்னையை பொறுத்தவரையில் மொத்தம் 45 கொரோனா தடுப்பூசி மையம் மற்றும் 19 நகர்ப்புற சமூக சுகாதார மையங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஐதராபாத் என ஐந்து பெருநகரங்களில்நடத்தப்பட்ட ஆய்வில் சென்னையில் தான் 2 தவணை தடுப்பூசிகளையும் அதிகமாக செலுத்தி கொண்டவர்கள் உள்ளது தெரியவந்துள்ளது. சென்னையில் 11% நபர்கள் இரண்டாம் தவணை செலுத்தி கொண்ட நிலையில், பெங்களூருவில் 10%, டெல்லி, மும்பையில் தலா 7% ,ஐதராபாத்தில் 5% தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.
18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு அதிகபட்சமாக பெங்களூரில் 64 சதவீதமும், சென்னையில் 43 சதவீதமும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பெங்களூரில் 45 வயது மேற்பட்டோருக்கான தடுப்பூசி 91%, சென்னையில் 85% செலுத்தப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.


தமிழக சட்டமன்ற தேர்தலில் நட்சத்திர தொகுதியாக சென்னை ஆ
உத்தர பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல்
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ
புதுடெல்லி இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ப
உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் முஸ்லிம் ராஷ்ட்ர
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கட
காஷ்மீரில் நாசவேலைகளை அரங்கேற்றி வந்த பயங்கரவாதிகளை
அசாம் மாநில ஐக்கிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. லெகோ ராம் போர
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி 22-ந் தேதி
உடலநலக் குறைவால் இறந்த உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வ
