குஜராத் பிரிவை சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராகேஷ் அஸ்தானா. எல்லை பாதுகாப்பு படை டைரக்டர் ஜெனரலாக இருந்த அவரை தலைநகர் டெல்லியின் போலீஸ் கமிஷனராக நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இதனையடுத்து அவர் டெல்லி ஜெய் சிங் மார்க்கில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்தில் போலீஸ் கமிஷனராக பதவி ஏற்றுக்கொண்டனர். முன்னதாக அவருக்கு போலீஸ் படையினர் அணிவகுப்புடன் வரவேற்பு அளித்தனர். வருகிற 31-ந் தேதியுடன் அவர் ஓய்வுபெற இருந்த நிலையில் அவருக்கு ஒரு வருடம் பணி நீட்டிப்பு அளித்து மத்திய அரசு இந்த புதிய பதவியில் அவரை அமர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ராகேஷ் அஸ்தானர் சி.பி.ஐ. சிறப்பு இயக்குனராக இருந்தபோது, அப்போதைய சி.பி.ஐ. இயக்குனராக அலோக் வர்மா இருந்தார். இருவரும் ஒருவரை பற்றி மற்றொருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் இருவரும் அவர்களது பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் பஞ்சாப் உள்ளிட்ட பல மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், புதிய போலீஸ் கமிஷனர் அதிரடி நடவடிக்கை எடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளாவில் வரதட்சணை கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அத
சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழக
கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜ
கேரளாவில் கொரோனா பரவல் விகிதம் படிப்படியாக குறைந்து வ
பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நேற்
கர்நாடக காங்கிரஸ் தலைவராக ஆர்.வி.தேஷ்பாண்டே இருந்த போ
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் உயர்மட்டக் கூட்டத்தி
தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வதாக அறிவித
ஜிதின் பிரசாதாவுக்கு கொள்கை உறுதிப்பாட்டை விட தனிப்ப
உடுமலை அருகே கொல்லப்பட்ட ஆண் யானையின் தந்தத்தை நேற்று
முன்னாள் துணை பிரதமரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான
அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து மற்றும் மணிப்
மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசாரம் மற்றும் வாக்குப
வளிமண்டல சுழற்சி காரணமாக குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்க
மதுரையில் இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருப
