முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டில், வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த சிறுமி ஹிஷாலினி உடலில் தீ பரவி உயிரிழந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட நால்வர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இதுவரை 25 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த சிறுமியின் பிரேத பரிசோதனை மற்றும் தரகர் உள்ளிட்டோரின் வங்கிக் கணக்குகள், ரிஷாத்தின் மனைவி உள்ளிட்டோரின் தொலைபேசி அறிக்கைகள், வைத்தியசாலை கட்டில் பதிவு அட்டை ஆகியவற்றின் அடிப்படையிலும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறான நிலையில் நேற்று பொலிஸாரால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ரிஷாத்தின் வீட்டில் வேலை செய்யும் சேவகன் ஒருவர் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே ரிஷாத்தின் வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த 22 வயது யுவதி ரிஷாத்தின் மைத்துனரால் இரு தடவைகள் பாலியல் துஷ்பியோகம் செய்யப்பட்டதாக குறித்த யுவதியால் வாக்குமூலம் வழங்கப்பட்ட நிலையில் அவரை கைது செய்த பொலிஸார் ஹிஷாலினியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நாட்பட்ட பாலியல் ஊடுருவல் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ஒ
புதிய சொகுசு போக்குவரத்து சேவை பெப்ரவரி முதலாம் திகதி
இலங்கையர்களின் இன்றைய நிலையில் உள்ளங்களில் பற்றி எரி
காலாவதியான சாரதி அனுமதி பத்திரத்தின் செல்லுபடியாகும
வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூ
மஹாபொல உதவித்தொகையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக
அனுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியின் சாலியவெவ பகு
நாட்டில் சாதாரண மக்களுக்கு அரச நிர்வாகத்தில் ஆலோசனை வ
அமெரிக்க டொலர்களில் சுங்கத் தீர்வையை செலுத்தி வாகனங்
யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 13
எனக்கு எதிரான போராட்டங்களை மக்கள் முன்னெடுக்க
நாட்டில் இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை பல்வேற
நியூயோர்க்கில் உள்ள ஐ.நா பொதுச் சபையில் சர்வதேச நாணய ந
இலங்கையில் ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் ஏப்ரல் 15 ஆம் திகதி வ
அபுதாபியில் இருந்து இலங்கையின் திருகோணமலைத் துறைமுக
