முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டில், வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த சிறுமி ஹிஷாலினி உடலில் தீ பரவி உயிரிழந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட நால்வர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இதுவரை 25 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த சிறுமியின் பிரேத பரிசோதனை மற்றும் தரகர் உள்ளிட்டோரின் வங்கிக் கணக்குகள், ரிஷாத்தின் மனைவி உள்ளிட்டோரின் தொலைபேசி அறிக்கைகள், வைத்தியசாலை கட்டில் பதிவு அட்டை ஆகியவற்றின் அடிப்படையிலும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறான நிலையில் நேற்று பொலிஸாரால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ரிஷாத்தின் வீட்டில் வேலை செய்யும் சேவகன் ஒருவர் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே ரிஷாத்தின் வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த 22 வயது யுவதி ரிஷாத்தின் மைத்துனரால் இரு தடவைகள் பாலியல் துஷ்பியோகம் செய்யப்பட்டதாக குறித்த யுவதியால் வாக்குமூலம் வழங்கப்பட்ட நிலையில் அவரை கைது செய்த பொலிஸார் ஹிஷாலினியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நாட்பட்ட பாலியல் ஊடுருவல் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
அரசாங்கத்தினை பதவி விலகக் கோரி காலி முகத்திடலில் தொடர
2021ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் மத
அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டிட பதிவேட்டு அறைக்கு தீ வை
திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) வ
கெஸ்பேவ நகர சபையின் தவிசாளர் உட்பட 33 உறுப்பினர்கள் சுய
மட்டக்களப்பு- காத்தான்குடியில் சட்டவிரோதமாக விடுவிக
இலங்கை அரசாங்கம் 13 வருடங்களாக சாதிக்காததை நிரந்தர மக்
நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன்
அரசு, ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால்கூட அதனை எதிர்கொள்
இலங்கையின் 33ஆவது பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றிய மஹிந
இந்த மாதத்தில் எந்த நேரத்திலும் எரிபொருள் தட்டுப்பாட
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்வதற்காக 15 ப
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இதுவரை ஆணைக்
