சட்டவிரோதமான முறையில் இந்தியாவில் தங்கியிருந்த 38 இலங்கையர்கள் குறித்து இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழக காவற்துறையினருடன், மங்களூர் காவற்துறையினர் இணைந்து சுமார் ஒரு மாதமாக நடத்திய தேடலில் 38 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர்கள் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்ல தயாராக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக நபர் ஒருவருக்கு, இலங்கை மதிப்பில் 10 இலட்சம் ரூபா வீதம் கொடுத்து கனடா செல்ல முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் மேலதிக விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த வழக்கு இந்திய தேசிய புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இந்த குழு கடந்த மார்ச் மாதம் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குஜராத் மாநிலம் வதோதரா நகரில் மத்திய சிறைச்சாலை உள்ளத
9 மாவட்டங்களுக்கான ஊரக
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கை மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதி கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெ சென்னை: 72-வது குடியரசு தினத்தையொட்டி சென்னை கோட்டையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த லட்சுமி நகர் பகுத போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நி உலகின் ஒன்பது நாடுகளுக்கு 60 இலட்சம் ‘டோஸ்’ கொரோனா த நாட்டின் தேசிய பறவையான மயில் உயிருக்கு போராடிய நிலையி கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் கங்கேசானந் இந்தியா முழுவதும் கொரோனாவின் 2-வது அலை மின்னல் வேகத்தி 2021-22 கல்வியாண்டு முதல் M.Phil படிப்பு ரத்து செய்யப்படுவதாக&n இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ம
