சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அவர்கள் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து விட்டு, பகவதி அம்மன் கோவில் மற்றும் படகுத்துறைக்கு செல்வது வழக்கம். கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், படகுகள் இயக்கப்படவில்லை. இந்த நிலையிலும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
அவர்கள் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து விட்டு, பகவதி அம்மனை தரிசனம் செய்ய செல்கிறார்கள். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து, கடற்கரை பகுதியில் நடைபாதை கடைகளும் அதிகரித்தன. இது சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக இருந்தது. அவர்கள் நடைபாதை கடைகளை அகற்ற கோரிக்கை வைத்தனர்.
அதைத்தொடர்ந்து நேற்று காலையில் குமரி மாவட்ட திருக்கோவில் இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) செல்வராஜ் உத்தரவின்பேரில், பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகநயினார் முன்னிலையில் கோவில் ஊழியர்கள் சுமார் 15 நடைபாதை கடைகளை அகற்றினார்கள். இதனால் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து புதிய கடன்களை பெற்ற
முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் மக்களின் இயல்பு ந
மேட்டூர் அணையை திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற
சேலம் மாவட்டம் எடப்பாடியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவ தொடங்கிய பிறகு கடந்த ஏ
இலங்கையின் பிரதமராக ஆறாவது முறையாக நேற்று பதவியேற்ற ர
கொரோனா நோய்த் தொற்று காரணமாக 2020-ம் ஆண்டுக்கான நீட் மற்ற
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கப்படுவதில் வெளிப்
காஷ்மீரின் ஜம்முவில் உள்ள விமானப் படைதளத்தில் டிரோன்
கடந்த 2014-ம் ஆண்டு, பெங்களூரு-ஹாசுர் சாகிப் நான்தத் எக்ஸ
இந்திய விமானப் படைக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 83 த
பொங்கல் பண்டிகையையொட்டி மது விற்பனை அதிகளவில் இருக்க
