யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களில் ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 376 பேர் கொரோனாத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏற்கனவே முதல் இரண்டு கட்டங்களிலும் ஒரு இலட்சம் பேருக்கு முதலாவது தடவை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 50 ஆயிரம் பேர் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர்.
தற்போது மூன்றாம் கட்டமாக இரண்டு இலட்சம் பேருக்கு முதலாவது தடவையாக தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டம் கடந்த 29ஆம் திகதி ஆரம்பமாகி நேற்றுடன் ஐந்தாவது நாளும் முன்னெடுக்கப்பட்டது.
சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு ரீதியாக 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் பாடசாலை ஆசிரியர்களுக்கும் வழங்கப்படுகின்றது.
நேற்றைய ஐந்தாவது நாளில் 14 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் மற்றும் வைத்தியசாலைகளில் என 22 ஆயிரத்து 34 பேர் கொரோனாத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்” – என்றார்.
வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதியில் பணியாறும் விய
கிளிநொச்சி நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாக
2021ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் மத
நாட்டில் சீனா முன்னிற்பது தொடர்பாகக் கேள்வி எழுப்புப
காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டத்தை சீர்கு
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்வது குறித்து மறுப
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசாங்கத்தால் விரைவில்
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 130 ப
இலங்கையை அண்மித்த பகுதிகளில் குறைந்த வளிமண்டலத் தாழ்
ராஜபக்ஷர்கள் மீதான மக்களின் வெறுப்பை ஜனாதிபதி திட்டம
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியிலிருந
மக்கள் எதிர்கொண்டுள்ள பட்டினிப் பிரச்சினையைத் தீர்ப
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் க
விஞ்ஞான ஆய்வுக்கான மிக உயர்ந்த ஜனாதிபதி விருது தமிழரா
விமான நிலையங்கள் நாளை (வியாழக்கிழமை) முதல் மீண்டும் சு
