கர்நாடக மாநில புதிய முதல் மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று உத்தர கன்னடா மாவட்டத்தில் வெள்ள சேதங்களைப் பார்வையிட வந்தார். இதற்காக அவர் பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளிக்கு வந்தார். அங்கிருந்து அவர் கார் மூலம் உத்தர கன்னடா மாவட்டத்திற்கு சென்றார்.
முன்னதாக, முதல் மந்திரி பசவராஜ் பொம்மை உப்பள்ளியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்குச் சென்றார். அவருடன் முன்னாள் மந்திரி சிவராம் ஹெப்பார் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் காரில் சென்றனர்.
முதல் மந்திரியின் காரை பின்தொடர்ந்து சிவராம் ஹெப்பாருக்கு சொந்தமான காரும் சென்றது. அவர்கள் கோகுல் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது சிவராம் ஹெப்பாருக்கு சொந்தமான கார், முதல் மந்திரியின் பாதுகாப்பு வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதனால் அந்த காரின் முன்பக்கம் சேதம் அடைந்தது.
இதில் அந்த காரில் இருந்த 4 பேர் லேசான காயம் அடைந்தனர். சிவராம் ஹெப்பார், முதல் மந்திரியின் காரில் இருந்ததால் அவர் காயமின்றி தப்பினார்.
இறைவனின் நேசத்துக்கு உரியவராக வர்ணிக்கப்பட்டவர் இப்
ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) கவுன்சில் கூட்டம் 3 ம
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் இன
திருமண நிகழ்வின் போது திடீரென மணப்பெண்ணை மாப்பிள்ளை அ
அண்ணல் அம்பேத்கரின் 131-வது பிறந்தநாளை ஒட்டி, திருச்சி ம
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை இன்ற
பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்
தமிழகத்தில் ஜனவரியில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பய
தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலையொட்டி, வாக்குச்சாவட
பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நேற்
தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இன்று (செவ
பிரபல திரைப்பட நடன இயக்குநர் கலா, பாஜகவில் இணைந்தார். ப
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி கார
மைசூரு பல்கலைக்கழக 101-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்
