தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற திருச்சி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த திருப்பூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் தினேஷ் 26 ரன்னும், கேப்டன் மொகமது 19 ரன்னும் எடுத்தனர்.
திருச்சி அணி சார்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டும், சரவண் குமார் 2 விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து, 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அமித் சாத்விக், முகுந்த் தலா 4 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். மொகமது அட்னன் கான் 9 ரன்னில் வெளியேறினார்.
நிதிஷ் ராஜகோபால், ஆதித்யா கணேஷ் ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
இறுதியில், திருச்சி அணி 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நிதிஷ் ராஜகோபால் 47 ரன்னும், ஆதித்யா கணேஷ் 43 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் ஒரு இளம் வீரருக்கு ம
இலங்கை அணியின் வீரர் லஹிரு திரிமன்னேவிற்கும் அணியின்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மொயின் அலிக்கு 20 நாட்க
அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷே
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் ஆட்டம் இ
தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானு
ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஆறாவது லீக் போட்டியில், றோயல் செலஞ
சிட்டா டெல் ட்ரிகோலர் விளையாட்டரங்கில் உள்ளூர் நேரப்
நடப்பு ஐபிஎல் சீசனின் ஐபிஎல் பிளே ஆஃப் குறித்து முக்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அ
இந்திய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்
பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒ
ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்
