ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் மாகாணங்களுக்கு இடையே பொதுப்போக்குவரத்தை ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதன்போது இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள பஸ்களுக்கு மாத்திரமே மாகாணங்களுக்கு இடையே போக்குவரத்தை நடத்த முடியுமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள காரணத்தால் பொதுப்போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
எனினும், ஆகஸ்ட் மாதம் முதல் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி அத்தியாவசிய தேவைகளுக்காக பயணிப்போருக்காக மாத்திரம் பொதுப் போக்குவரத்து சேவைகளை முன்னெடுப்பதற்கும், இந்த சேவைகளை அலுவலக நேரங்களில் நடத்துவற்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
புஸ்ஸலாவை இந்து தேசியக் கல்லூரியின் நவராத்திரி கலைவி
இரவு வாழ்க்கைச் செயற்பாடுகளை அறிமுகப்படுத்துவது குற
சிறிலங்காவின்74வது தேசிய சுதந்திர தினம் கொண்டாட இன்னு
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீ
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற ஆப்பிள் பழ
வவுனியா கணேசபுரம் காட்டுப் பகுதியிலிருந்து
பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கம் செ ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய முகவர் நில பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து அலரி மா ஜெனிவா தீர்மானத்துக்கான இணை அனுசரணையிலிருந்து விலகி இலங்கைக்கு தேவையான எரிபொருளை ஏற்றிய 5 கப்பல்கள் எதிர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்ப நோர்வூட் தொடக்கம் பொகவந்தலாவ வரையிலான பிரதான வீதியில உலகளாவிய ரீதியில் முன்னணி சுற்றுலா நாடுகளின் பட்டியல திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்
