மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு 10 சதவீதமும் இட ஒதுக்கீட்டை இந்த கல்வி ஆண்டு முதலே அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் அனைத்திந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு 10 சதவீதமும் இந்த ஆண்டே இடஒதுக்கீடு வழங்கும் வரலாற்று சிறப்பு மிக்க முடிவை எடுத்ததற்காக பிரதமர் மோடியை பாராட்டுகிறேன்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றியிருப்பதன் மூலம் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களின் நலன்கள் மீதான மத்திய அரசின் உறுதிப்பாட்டை பிரதமர் வெளிப்படுத்தி இருப்பதாகவும் அவர் புகழாரம் சூட்டியிருந்தார்.
கொரோனா நேரத்தில் உயிர்காக்கப் போராடும் முன்களப் பணிய
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு நேற்று அற
கேரளாவில் கம்யூனிஸ்டு கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி இடைய
கடல் மார்க்கமாக தமிழ்நாட்டிற்கும் பின்னர் மங்களூருவ
கடந்த 201 ஆம் ஆண்டு திருச்சியிலிருந்து கடலூர் நோக்கி செ
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 23-ந்தேதி கலைவ
கிழக்கு லடாக்கில், கடந்த ஆண்டு மே மாதம் சீன ராணுவ வீரர்
கேரளாவில் மழை வெ
பருவ நிலை மாற்றம் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்
தீபாவளி விடுமுறை முடிந்த நிலையில் மீண்டும் சென்னைக்க
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சேலம் மற்றும் ஈரோடு மாவ
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கி
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண
