காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கும் டுவிட் பதிவில், “ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. டுவிட் கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.
அதுவரை, அவர் தனது மற்ற சமூக வலைத்தளங்களில் உங்கள் அனைவருடனும் தொடர்பில் இருப்பார். நமது மக்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி, அவர்களின் கோரிக்கைகளுக்காக போராடுவார். ஜெய் ஹிந்த்!” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தலைநகர் டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் ராகுல் காந்தி டுவிட் ஒன்று வெளியிட்டதாகக் கூறி அவரது பதிவு ஒன்றை நேற்று டுவிட்டர் நிறுவனம் நீக்கியிருந்தது. இந்த நிலையில், தற்போது ராகுல் காந்தியின் கணக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
தீனதயாள் சேவை மையம், உலக கலை விளையாட்டு கூட்டமைப்பு, மத
இந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள கதிர்வேல் சந்திய
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இந்து மத தலைவர் காளிச்
கோவையில் காதல் திருமணம் செய்த ஜோடியை பெற்றோர் நடுரோட்
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர
பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் குற
இந்தியாவின் புகழ்பெற்ற புண்ணிய தீர்த்தங்களுள் ஒன்
தமிழக சட்டமன்ற தேர்தலில் நட்சத்திர தொகுதியாக சென்னை ஆ
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு
