கேபினட் மந்திரிக்கு இணையான அந்தஸ்து வழங்கியதன் மூலம் முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பாவுக்கு அரசு பங்களா, கார் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கிடைக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் அவர் தற்போது தங்கியுள்ள காவேரி பங்களாவில் தொடர்ந்து தங்கவும் வாய்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், தனக்கு கேபினட் மந்திரி அந்தஸ்து வேண்டாம் என்று கூறி முதல்மந்திரி பசவராஜ் பொம்மைக்கு எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது
கர்நாடக அரசு நேற்று முன்தினம் ஒரு உத்தரவை பிறப்பித்து முன்னாள் முதல் மந்திரியான எனக்கு கேபினட் மந்திரி அந்தஸ்து வழங்குவதாக தெரிவித்துள்ளது. மந்திரிக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் முதல் மந்திரிக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சலுகைகள் மட்டும் வழங்கினால் போதும். அதனால் கேபினட் மந்திரி அந்தஸ்து உத்தரவை வாபஸ் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம்கள் எழுச்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் தங்கள் ந
தமிழக சட்டசபை பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை கூட
பழைய ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.100 நோட்டுகள் குறித்து ரிசர்வ்
ஆந்திர மாநிலத்தின் புதிய அமைச்சரவையில் இன்று நடிகை
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பலர் தயங்
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசி
சித்தூர் மாவட்டம், ராமச்சந்திரபுரம் அடுத்த சி.ராமபுரம
உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ண
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக அமைக்கப்பட
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலை
