காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக காஷ்மீர் சென்றார்.
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு முதல் முறையாக ராகுல் காந்தி நேற்று ஸ்ரீநகர் சென்றார். ஸ்ரீநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து பேசியதாவது:
எங்கள் குடும்பம் டெல்லியில் வசிக்கிறது. அதற்கு முன் அலகாபாத்திலும், அதற்கு முன் காஷ்மீரிலும் வசித்து வந்தது. காஷ்மீரிகளின் பழக்க வழக்கங்கள், சிந்தனை ஓட்டம் ஆகியவை என்னிடமும் உள்ளது.
பாராளுமன்றத்தில் காஷ்மீர் விவகாரம், பெகாசஸ் விவகாரம் குறித்து பேச முயற்சித்த போதெல்லாம், எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதில்லை. காஷ்மீர் பிரச்சினையை அன்பு மற்றும் ஈடுபாட்டின் மூலம் வேறு வழியில் தீர்க்க முயற்சித்தோம். ஆனால் பா.ஜ.க. அனைத்தையும் சிதைத்து விட்டது. காஷ்மீர் மக்கள் காயப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை நான் அறிவேன்.
அன்பு மற்றும் புரிதலின் உறவை நான் விரும்புகிறேன். நான் உங்களுக்குத் துணை நிற்பேன், உங்களுக்கான மாநில அந்தஸ்தைப் பெற நான் போராடுவேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீர் வரும் போது நான் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டேன். தற்போது நான் ஜம்மு மற்றும் லடாக் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்கிறேன். இது ஓர் ஆரம்பம். நான் மீண்டும் மீண்டும் வருவேன் என தெரிவித்தார்.
மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுலை நியமிக்க
இந்தியாவின் புகழ்பெற்ற புண்ணிய தீர்த்தங்களுள் ஒன்
தமிழ் சகோதர சகோதரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இனிய ராஜஸ்தான் மாநில புத்தாண்டின் முதல் நாளான நேற்று நவ சம பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று டெல்லியில் உள்ள தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அற குமரி மாவட்டம் நாகர்கோவில், கோட்டார் செட்டித்தெருவில குவாட் மற்றும் ஐநா மாநாட்டில் பங்கேற்க 4 நாள் சுற்றுப் இந்திய கடனுதவியின் கீழ் 38,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிக கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்கும் வகையில் புதுச்சேர ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ தீவிரவாத நாசவேலைகளை தடுக்க, நாட்டில் முதல் முறையாக சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவ வேண்டும் எனவும் த பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம், பெட்ரோல் விலை
