தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தபிறகு, ஜூன் 21-ந்தேதி சட்டசபையின் முதல் கூட்டம் தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. அதன்பின்னர் நேற்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட்டை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் துறைவாரியான நிதி ஒதுக்கீடு, பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. முழுக்க முழுக்க இந்த பட்ஜெட் காகிதமில்லா இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.
கூட்டத்தொடரின் 2ம் நாளான இன்று, தமிழக வரலாற்றில் முதல் முறையாக வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.
இந்த பட்ஜெட்டில் வேளாண் துறை, கால்நடைத்துறை, பால்வளத்துறை போன்றவற்றில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
இ-பட்ஜெட் என்பதால் அமைச்சர் பட்ஜெட்டை வாசிக்கும்போது, அந்த வாசகங்கள், எம்.எல்.ஏ.க்களின் மேஜையில் வைக்கப்பட்டிருக்கும் கம்ப்யூட்டர் திரை மூலம் ஓடுகிறது. அதன்மூலம் பட்ஜெட் தொகுப்பை எம்எல்ஏக்கள் கவனித்தனர்.
திமுக இளைஞரணி அமைப்பாளர் செல்லதுரை படுகொலைக்கு
முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு மற்றும் அவரது உறவி
கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் உள்ள தூதரகத்திற்கு 2020
ஆளுநர் பன்வாரிவால் புரோஹித்தை எட
திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் கிராமப்புற க
இந்தியாவில் பிச்சை எடுத்து கொண்டிருந்த இளம்பெண் தற்ப
ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் மது
கேரளாவில் நடந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த
கொரோனா பரவலால் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில்,
ஈராக்கில் இருந்து செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமை
முன்னாள் முதலமைச்சரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி ப
கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே உள்ள பொரணி அரசு மேல் நி
ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள
இந்தியா- இங்கிலாந்து இடையியான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து பாடசாலை மாணவி
