சென்னை சத்தியமுர்த்தி பவனில் உள்ள 150 அடி உயர கோடி கம்பத்தில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று தேசிய கோடி ஏற்றி வைத்தார்.
அப்போது, சத்தியமூர்த்தி பவன் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த காந்தியின் கைராட்டையை திறந்துவைத்தார் கே. எஸ். அழகிரி. இதில் நடிகர் சிவகுமார் பங்கேற்றார். சேவாதள தொண்டர்கள் அணியும் வெள்ளை குல்லாவை அணிந்து நடிகர் சிவகுமார் அந்த நிகழ்வில் பங்கேற்றார் . நிகழ்வில், கே.எஸ்.அழகிரிக்கு காந்தி பற்றிய புத்தகம் ஒன்றினையும் அளித்தார் சிவகுமார்.
முன்னதாக மரைந்த ஞானதேசிகன் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தபோது சத்தியமூர்த்தி பவனில் நடந்த கண்ணதாசன் பிறந்தநாள் விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிவகுமார் பங்கேற்றிருந்தார்.
தற்போது காந்தியின் கைராட்டை திறப்பு விழாவிலும் சிவகுமார் பங்கேற்று இருப்பதால் , சிவகுமார் தன்னை காங்கிரஸ் அனுதாபியாக காட்டி கொண்டிருப்பதாக அக்கட்சியினர் கருதுகின்றனர். மேலும் ராகுல் காந்தி முன்னிலையில் அவர் விரைவில் காங்கிரஸ் இணைவார் என்ற எதிர்பார்ப்பும் அக்கட்சியினர் மத்தியில் எழுந்திருக்கிறது.


பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை திடீர் குப்பம் பகுத
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடி ச
இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட 2 புதிய போர் கப்பல்கள்இ இ
கடந்த ஜூலை மாதம் 19ம் தேதியன்று மழைக்கால கூட்டத்தொடர
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த
கொரோனா தொற்று லேசாக இருப்பவர்கள் வீடுகளில் தனிமைப்பட
பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை, எல்லைப்பகுதிய
மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் தொழில், வர்
கேரளாவில் ஏழைகளுக்காக 5 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படு
உத்தரகாண்டின் சுகாதார மந்திரி தன்சிங் ராவத் செய்தியா
பொங்கல் பண்டிகையையொட்டி மது விற்பனை அதிகளவில் இருக்க
2019 நாடாளுமன்ற தேர்தலில் மராட்டிய மாநிலம் அமராவதி தனி த
