கோப்பாய் சமிக்ஞை விளக்கு சந்தியில் இரண்டு கனரக வாகனங்கள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனமும் கோப்பாயில் இருந்து கைதடி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்றும் மோதிக் கொண்டதில் சந்தியிலுள்ள சமிக்ஞை விளக்கு சேதமடைந்து தொலைத்தொடர்பு கம்பம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டது.
சமிக்ஞை இலக்கங்கங்கள் ஒளிர்ந்து கடைசி மூன்று செக்கன்கள் முடிவடையும் நிலையில் மற்றைய பகுதிக்கு செல்வதற்காக வேகமாக பயணித்த இரண்டு கனரக வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியதில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் வாகனத்தின் சாரதி ஒருவர் காயமடைந்தார்.
குறித்த சம்பவத்தில் சமிக்ஞை விளக்கு பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவரும் மயிரிழையில் உயிர் தப்பியதுடன் இவற்றின் காரணமாக போக்குவரத்தும் சிறிது நேரம் தடைபட்டிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியில் 150 கிலோ கஞ்சா நேற்று இரவு
பொருளாதார நெருக்கடியினால் பிள்ளைகளை பராமரிக்க முடிய
கம்பஹாவில் சில தினங்களுக்கு முன்னர் மக்கள் விடுதலை மு
இலங்கையில் கொரோனாவால் மரணிப்போரின் சரீரங்களைத் தகனம
தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் ம
இலங்கை மின்சாரசபையின் உயர் அதிகாரிகள் ஜனாதிபதி கோட்ட
இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட ஒக்ஸ
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்து நீத
கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றி
முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி கேரளா கஞ்சாவின
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்திய
நாட்டில் தற்போது நிலவும் கடும் எரிவாயு தட்டுப்பாடு கா
ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் ஆளும் கட்சியின் நாடாளுமன
அநுராதபுரம், பூஜா நகருக்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றி
மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து தரங்களையும் 2 வாரத்தி
